கற்கை நன்றே கல்வி விழாவில் நட்சத்திர ஆசிரியர்-2024 விருது

ஆனந்த சைதன்யா அறக்கட்டளை முன்னெடுக்கும் “கற்கை நன்றே” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, கோவை சத்தி சாலையில் வழியாம்பாளையம் பிரிவில் SNS College of Technology அருகேயுள்ள ஸ்வர்ணா ஹாலில் 25 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவியர், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை ஷாஜகான் நகரிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆர். தமிழ்செல்வன் M.Sc., B.Ed., M.Phil.
அவர்களுக்கு இந்த ஆண்டிற்கான நட்சத்திர ஆசிரியர்-2024 விருது வழங்கப்பட்டது, மேலும் அவரது கல்விச்சேவையை பாராட்டும் விதமாக கல்வி கடவுளான சரஸ்வதி தேவி சிலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *