உளக்குவிப்பு- கடிதம் – சூரிய நாராயணன்

உளக்குவிப்பு- கடிதம் – சூரிய நாராயணன்

வணக்கம்

மார்ச் 8-10 2024 தேதிகளில் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சி செய்யத் தொடங்கி 11 மார்ச் 2025தோடு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்தது (மார்ச் 12 2024ல் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன்). இந்த ஒரு வருடத்தில் 15ல் இருந்து 20 (அதிகபட்சம்) நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பயிற்சியை விடாமல் செந்திருக்கிறேன்.

இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள், கிட்டத்தட்ட எல்லா மாதங்களிலும் வெளியூர் பயணங்களுக்கு இடையிலும் தவறாமல் பயிற்சி செய்ய முடிந்திருப்பதே பெரும் நிறைவைத் தருகிறது.

– சூரிய நாராயணன்


இது கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் 8,9 &10 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திரு.சூரிய நாராயணன் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்ட தியானபயிற்சிகளை கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக பயிற்சி செய்து அதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.

இந்த கடிதம் கடந்த 8 ஏப்ரல் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் உளக்குவிப்பு- கடிதம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

உளக்குவிப்பு – ஈரோடு வெள்ளிமலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தியான பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர் திருமதி. இராச மணிமேகலையின் “அருமருந்து” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பகிர்வு!

உளக்குவிப்பு – ஈரோடு வெள்ளிமலையில் மூன்று நாட்கள் நடைபெற்ற தியான பயிற்சி வகுப்பின் பங்கேற்பாளர் திருமதி. இராச மணிமேகலையின் “அருமருந்து” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பகிர்வு!

அருமருந்து!

அன்புநிறை ஜெ.

பிப்.28, மார்ச் 1,2 தேதிகளில் உளக்குவிப்பு பயிற்சி வெள்ளிமலையில் என்ற அறிவிப்பு உங்கள் தளத்தில் கண்டேன். சென்ற வருடமே கிளம்ப ஆயத்தமாகி இந்த முறை கைகூடியது. நெடுநாட்களாக தூக்கமின்மை, மனம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். புதுவையில் இருந்து யார் யார் வருகிறார்கள் என்று தெரியாத நிலையிலும் தனி ஒருத்தியாக வெள்ளிமலை கிளம்பிவிட்டேன். வாட்ஸ்அப் குழு 5 நாட்கள் முன்னதாக Open ஆனபோது யாருமே புதுவையில் இருந்து வெள்ளிமலைக்கு கிளம்புவதாக அதில் தகவல் இல்லை. கணவரும் மகனும் போருக்கு அனுப்புவது போல இரவு 11.00 மணிக்கு Sleeper Coach பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். ஏறி உட்கார்ந்ததும் போனைப் பார்த்தால் வாட்ஸ்அப் குழு பரபரத்து கிடந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் இருந்து அந்தியூர் வரை TT-ல் யாரெல்லாம் வருகிறீர்கள் என் ஓட்டெடுப்பு வேறு போய்க் கொண்டிருந்தது. சென்னை, பெங்களுர், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், சேலம், காஞ்சிபுரம் இடங்களில் இருந்து வருகிறோம் எனப் பலரும் பதிவிட, ஒருவர் நான் பைக்கில் வரேன் என்கூட யார் வரீங்க…. என்பன போன்ற தகவல்களால் தகித்தது குழு. அட்மினும் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாருங்கள் என எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார், நான் ஒருத்தி மட்டும், “ஹலோ! யாராவது என்னை பைபாஸில் Pickup பண்ணிக்கிறீர்களா” எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன். பவானி பைபாஸ் எங்கே இருக்கு? அந்தியூர் எங்கே இருக்கு? ஈரோடு ரயில்வே ஸ்டேசன் எங்கிருக்கு? என எதுவும் தெரியாமல் போகும் இடம் பற்றிய கனவுகளோடு 4.15 மணிக்கு பவானி பைபாஸில் வந்து இறங்கினேன். வாயிலே இருக்கு வழி என்பார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான். (நான் என்ன Sixteen ஆ Just Sixty!) ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’. தெய்வம் போலீஸ்காரர் வடிவில் வந்து அந்தியூருக்கு பஸ் ஏற்றிவிட்டது. காந்தியடிகள் சொன்னது போல் (என்றைக்கு ஒரு பெண் தன்னந்தனியாக…) 28.02.25 அன்றுதான் இந்திய சுதந்திர தினம். அந்தியூர் இறங்கினால் அங்கே நித்யவனம் செல்லும் தெய்வங்கள் எனக்கு உதவி பண்ண, அந்தியூரிலிருந்து வெள்ளி மலைக்கு  பேருந்தில் ஏறி அமர்ந்து பெருமையோடு முதல் பஸ் பிடித்துவிட்டேன் என்று குழுவில் பதிவிட்டேன்.

விரையும் தோட்டங்களை, பனியில் நனைந்த மரங்களை, பனிப்படலத்தின் ஊடே தெரியும் சின்னஞ்சிறு ஊர்களை, ஷேவ் செய்யப்பட்டது போன்ற பெயர் தெரியாத மரங்களை, பூமியிலிருந்து  மேலே கிளம்பி வானத்திற்கு சாமரம் வீசும் மரங்களை, கரையும் காகங்களை, கூவும் குயில்களை, ‘தண்டலை மயில்களின் நடனத்தை, தாமரைகள் விளக்கம் தாங்குவதை, குவளைக்கண் விழித்து நோக்குவதை’ வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வெள்ளிமலை நித்யவனத்தில் கால்பதித்தேன்.

ரம்மியமான இயற்கைச்சூழல், அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடம், சரஸ்வதி அம்மாவின் கைப்பக்குவத்தில் அருமையான உணவு, இனிப்பும் புளிப்பும் கலந்த அந்தப் பானகம், அந்தியூர் மணியின் அனுசரணையான பேச்சு…. நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு நித்யவனம் சொர்க்கபூமிதான். தியானம், யோகா, தத்துவம், மனஅமைதி, இலக்கியம் இவைகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்த இந்த இடத்தை நீங்கள் ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதற்கான காரணம் அங்கு சென்றவர்களுக்கே தெரியும்!

இறை வழிபாடு முடிந்து குருநித்யா அரங்கில் நுழைந்தோம். நெடிய தோற்றத்தில், தூய வெண்ணிற ஆடையில், நிலம் அதிராமல் நடந்து வந்து அமர்ந்தார் குரு தில்லை செந்தில்பிரபு. சுய அறிமுகம்  முடிந்தது. வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள். 50, 60 வயதுகளில் இருந்தோர் கால்வாசி. இந்த இளைஞர்களுக்குத்தான் என்னென்ன பிரச்சினைகள்? தொழில் முனைவோர், தனியார், அரசு அலுவலகங்களில்   உயர்பதவியில் இருப்போர், காவலர்கள், இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தோடு வந்திருந்தோர் எனப் பலரகத்தினர். இவர்கள் என்ன காரணத்திற்காக உளக்குவிப்பு பயிற்சிக்கு வந்தார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தூக்கமின்மை, கவனச்சிதறல், மனஅழுத்தம், செல்போன் பாதிப்பு இவைகள்தான் எனலாம்.

வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் குரு மனம், விழிப்புணர்வு, கவனக்குவிப்பு, இக்கணத்தில் வாழ்தல் முதலான விசயங்களைக் கூறினார். வகுப்புக்கு நேரத்தோடு வருதல், செல்போன் தடை இதனை கவனிப்புடனும் கண்டிப்புடனும் செயல்படுத்தினார். கேள்விகளும் பதில்களுமாக வகுப்பு சென்றது. 2 மணியிலிருந்து 5.30 மணிவரை Break. இரவு 9.00 மணி வரை வகுப்பு நீண்டது. சிறப்பாக, சாப்பாடு பற்றி சொல்லியே ஆகவேண்டும். வீட்டில் கூட நாம் சாப்பிடுகிறோம்தான். இங்கு சாப்பிட்டதுதான் சாப்பாடு. வாயார, வயிராற சோற்றை அள்ளி, அள்ளி உண்டோம்! பசித்துப் புசி என்று சும்மாவா சொன்னார்கள்? சரஸ்வதியம்மாள் நல்ல உடல் நலத்துடன்  வாழ இறை அருள்புரியட்டும்! இங்கிருந்த மூன்று நாட்களும் குருவாலும் இயற்கை சூழலாலும், அகமும் புறமும், அடியோடு மாறிவிட்டது. அதிர்ந்த பேச்சரவம் கூட கேட்கவேயில்லை.

சனிக்கிழமையன்று பிரணாயாம, தியானப் பயிற்சிகள் முடிந்த பிறகு குரு இன்னும் சில பயிற்சிகளை பயிற்றுவித்தார். அதாவது, நின்ற நிலை, கிடந்த நிலை, அமர்ந்த நிலை மட்டுமன்றி உடலசைவுகள் மூலமான பயிற்சியும் நாடி நரம்புகளை புத்துணர்ச்சி அடையச்செய்யும் என்று கூறினார். அடுத்து தூக்கமின்மை பிரச்சனைக்காகத்தான் பலபேர் இங்கு வந்திருந்தோம். அந்தப் பயிற்சி  முடியும் தருவாயில் பலரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதை ‘கொர் கொர்’ குறட்டையொலியால் உணரமுடிந்தது. இப்பயிற்சிக்குப் பின்னர் நான் எப்போதும் நித்ரா தேவியின்  அணைப்பிலேயே இருந்தேன். யாராவது ஒருவர் தேவியின் பிடியிலிருந்து என்னை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். எதற்காக நான் இங்கே வந்தேனோ அது நிவர்த்தியானதை உணர்ந்தேன்.

நான் அன்று மதியம் உங்கள் புத்தகங்களை அந்தியூர் மணியிடம் வாங்கிக் கொண்டு வந்ததைப் பார்த்து பலரும் ஆர்வமுடன் சென்று வாங்கினர். இரவு உணவு முடிந்தவுடன் அந்தியூர் மணி, ‘இசை மழையில் நனையத் தயாரா’ குங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்க, மதியம் வாங்கிய புத்தக வாசம் என்னை அறைக்கு அழைக்க, நான் புத்தகத்தில் மூழ்கினேன். இங்கே இசை மழையில் நனைந்து, அனைவரும் தலை துவட்டும் நேரத்தில் நான் அங்கு செல்ல ‘வாங்க வாங்க நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க’ என்றவுடன் மங்களம் பாடி இசைக் கச்சேரியை முடித்துவைத்தேன்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியோடு வகுப்பு நிறைவடையும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. அன்றைய வகுப்பில் இதுவரை கற்றுக்கொடுத்த பயிற்சிகள், தியானமுறைகள், சந்தேக நிவர்த்திகள் மறுபடியும் நினைவூட்டப்பட்டது. மூன்று நாட்களாக நடைபெற்ற பயிற்சியின் பின்னூட்டம் பற்றி பலர் பேசினர். பின்பு குரு அனைவரையும் கண்களை மூடி அமரக் கேட்டுக் கொண்டார். இறுதியாக அவர் உபதேசித்த ‘அந்த மந்திரம்தான்’ அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இதுதான் இந்தப் பயிற்சியின் உச்சம்! அந்தக் குரலின் சக்தியும், அமைதியும், அந்த இடத்தின் சூழலும் எப்படிப்பட்டவரையும் அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்வேன். மூன்று நாட்களாக எடுத்துக்கொண்ட பயிற்சியில் மனம் பண்படுத்தப்பட்ட நிலம்போல் அவ்வளவு இலகுவாக இருந்ததால் அவரவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், விசும்பலும், சன்னமான அழுகையொலியும், அவ்விடத்தை நிறைத்தது. மனதில் உள்ள குப்பைக்கூளங்களைத் தூர்வாரி, சரிசெய்துவிட்டு அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார் குரு. ‘கல்லுதல்’ என்ற சொல்லுக்கு ‘அகழ்தல்’ எனப் பொருள். ஒரு ஆசிரியராக எங்களின் அகத்தே இருந்து என்னென்ன அகழ்ந்தெடுத்தார் என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம். கலங்கிய விழிகளுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். ‘கண்டும் கேட்டும் உறவாடிய நாங்கள் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்தோம்’.

ஏன் சார் எங்களை அழ வைச்சீங்க?

நித்யவனத்தின் அருமருந்தை உட்கொண்டு வீடு திரும்பிய நான் நானாக இல்லை! யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை. மனதின் கசடுகள் நீங்கி, எண்ணஅலைகள் ஏதுமற்றவளாக, அமைதியாக என்னை நானே உள்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்!  குறையொன்றுமில்லை!

பயிற்சிக்கு வந்த அனைவரின் சார்பாக குருவுக்கும், தங்களுக்கும், மற்ற வர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்!

இராச மணிமேகலை

Sharings Link :  அருமருந்து | முழுமையறிவு

Ulakkuvippu – Three-day residential meditation program participant, Senthil Arasu Subramani Sharings through letter

Ulakkuvippu – Three-day residential meditation program participant, Senthil Arasu Subramani Sharings through letter

I am writing to express my immense gratitude for the incredible three-day residential meditation workshop held from February 28 to March 2, 2025 , at Nithyavanam, Vellimalai. It was an absolute pleasure to be a participant in this transformative experience.

From the serene location to the comfortable accommodation, delicious food, and, most importantly, the well-structured meditation workshop, every aspect of the program was flawlessly organized. The guidance and hand-holding approach made it exceptionally easy for a novice like me to learn and follow the proven meditation technique in , Ulakkuvippu. Nothing could have been better than this event!

A special thanks to “Guruji” Mr. Thillai Senthil for their dedicated care and commitment to ensuring that every participant absorbed the intended teachings with clarity and confidence. His personal attention made a significant impact on my learning journey.

I also extend my sincere appreciation to Writer “J ” for incorporating this session into Unified Wisdom. This workshop is truly a must-have experience for anyone aspiring to achieve excellence in both personal and professional life.

Once again, thank you for organizing such a life-changing program. I look forward to participating in more such enriching sessions in the future.

Thanks

Senthil Arasu Subramani

Ananda Chaitanya Focus – Meditation Intensive Program Sharings

Ananda Chaitanya Focus – Meditation Intensive Program Sharings

Dear Thillai Guruji,

Yesterday evening After I experienced the Stillness meditation. Yogic exercises Asanas, Panayama & Chaitanya Meditation I felt calm and peaceful inside. My mind was fully quiet I didn’t think about any worries or problems. For The first time I felt my mind is so happy without any reason & thought process, mind is entirely happy.

Today morning nearly after 06:30 am I experienced the above 5 sets of yoga practices, My mind is entirely blank and calm with happy, I experienced this peaceful silent for more than 2 hours.

Especially while I’m doing Chaitanya meditation, I felt too silent in my inner mind, I entirely connected with myself. After I experienced the Chaitanya Meditation my entire body is relaxed, my mind is calm and very happy. I felt too wonderful experience in Chaitanya meditation.

Vishwa
Design Engineer
Coimbatore.

ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்பு விழா

ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்பு விழா

தில்லை செந்தில்பிரபு உயர்தொழில்நுட்ப வணிகத்தில் ஈடுபட்டிருப்பவர். தியானப்பயிற்சி அவர் நடத்திவரும் தனிப்பட்ட செயல்பாடு. முப்பதாண்டுகளுக்கும் மேலாக தியானப்பயிற்சியில் அனுபவம் கொண்டவர். முழுமையறிவு அமைப்பின் சார்பில் தொடர் பயிற்சிவகுப்புகள் நடத்திவருகிறார்.

கோவையில் அவர் தனக்கான தியானமையம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதை நான் நாளை (20 டிசம்பர் 2024) அன்று திறந்துவைக்கிறேன்.

இடம் சி. பிளாக், சைட் 2, டி.ஆர்.எஸ்.அவென்யூ, குரும்பப்பாளையம் கோவை.

காலை 8:00 மணிமுதல் 9:15 வரை காலையுணவு

விழா காலை 9:30 முதல் 10:30 

நிகழ்ச்சி நிரல்

  • 9.30 இறை வணக்கம். -கவி நிலவன்
  • 9:35 குருபூஜை – தில்லை
  • 9:40 வரவேற்பு & தியான மைய அறிமுக உரை – தில்லை
  • 9:50: நினைவுப்பரிசு வழங்குதல்
  • 9:52 : குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை – ஜெயமோகன்
  • நன்றி உரை – விஜய் குமார் சம்மங்கரை

திறன் மேம்பாட்டு கூடங்கள் திறப்பு.

  • பிரக்யா – ஜெயமோகன்
  • சங்கல்பா – திருநாவுக்கரசு
  • தேஜஸ் – திருநாவுக்கரசு

இது ஆனந்த சைதன்யா தியான மையம் திறப்பு விழா குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா எனும் தலைப்பில் டிசம்பர் 19, 2024 அன்று பிரசுராமான செய்தி தொகுப்பு

அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் – மனோஜ், திருவானைக்காவல் 

அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் – மனோஜ், திருவானைக்காவல் 

டிசம்பர் 15, 2024

அன்புள்ள ஜெ,

நலமறிய ஆவல்.

இந்த வாரம் பங்கெடுத்த தியானம் உளக்குவிதல் வகுப்பின் அனுபவங்களை இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.

முதலில் மனதிற்கான பயிற்சி என்று தனியாக நேரம் ஒதுக்கி அன்றாடம் நான் செய்தது இல்லை. புத்தக வாசிப்பொன்றுதான் நான் செய்திருந்த உட்சபட்ச கூர்ந்த தியானம். தற்போது இந்திர நீலம் படித்துக்கொண்டிருக்கிறேன். துவாரகையில் இருக்கும் வரை மனம் அதில் லயிக்கிறது. வெளிவந்த உடனேயே அலுவலக வேலை செய்யும் ஒரு உருவாகவும், அதே நேரம் இடைவிடாது மனத்துள் ஓடிக்கொண்டிருக்கும் உரையாடல்கள், கேள்விகள், பதில்கள் என்று சக்தியை செலவிடும் ஒரு உருவாகவும் இரு கூறாக மனம் பிரிந்து நிற்கிறது.

மிக முக்கிய அரிதலாக தில்லை குருஜி சொல்லிக்கொடுத்தது இந்த மனம் மற்றும் உடல் இரண்டிற்குமான ஒத்திசைவை. மூன்று நாட்களும் முயன்று முயன்று அதை தான் அடைய முற்பட்டோம். ஓரளவு அடையவும் செய்தோம். 

இயற்கை தியானத்திற்காக ரம்மியமான கால நிலையை வழங்கியது, நாள் முழுக்க குளிரும் அவ்வப்போது மென் தூறலும் இருந்தன. 

தேநீருக்கு பதிலாக சூடான எலுமிச்சை சாறு போன்று நிறைய மாற்றங்களை வகுப்பிற்காக ஏற்படுத்தியிருந்தார், அனைத்து வகுப்புகளும் குறித்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்பே தொடங்கி அனைவரும் நிலையில் அமர்ந்த பின்னரே தொடங்கியது.

முதல் பயிற்சியாக Stillness meditation கற்றுக்கொடுத்தார். முதலில் நிலையில் அமர்ந்து உடலின் தற்போதைய நிலையை கவனிக்க உதவும் பயிற்சி, அதனை தொடர்ந்து yogic exercises என்னும் உடற்பயிற்சிகள். வெள்ளிக்கிழமை மாலை கணம் குறித்த விளக்கமும் அதனை தொடர்ந்து சில உலகுவித்தல் குறித்த கருவிகளையும் பற்றி விளக்கினார். கணம் குறித்த விளக்கம் மிகப்பெரிய திறப்பாக இருந்தது. நேற்றும் நாளையும் என்று ஓடி ஓடி இந்த கணத்தை இழந்தபடியே இருக்கிறேன். 

இரண்டாம் நாள் காலை பிராணயாமா பயிற்சிகளை முடித்து குருவணக்கத்தோடு சைதன்ய தியானம் தொடங்கினோம். உண்மையில் மூன்று படிநிலைகளாக ஆழ்ந்த அனுபவத்தை கொடுத்தது. பயிற்சி முடித்தபின் தெளிந்த ஓடைக்கருகில் அமர்ந்திருந்து அமைதியான நீர் ஒழுக்கை காண்பது போன்று எண்ணங்கள் தெளிவாகின. மாலை மீண்டும் சிறு வகுப்பும் பயிற்சிகளும்.

ஞாயிறு காலை மீண்டும் Stillness meditation, யோக உடற்பயிற்சிகள், நாத முத்ர மற்றும் பஞ்ச பிராண பிராணயாமா, நாடி சோதனா, யோக நித்ரா இறுதியாக சைதன்ய தியானம் செய்து முழு பயிற்சி முடித்தோம்.

வகுப்பில் பங்கு கொண்ட நண்பர்கள் பலவகையான பின்னணியிலிருந்து வந்திருந்தனர். தலைமை மேலாளரிலிருந்து திரைப்பட துறை உதவி இயக்குனர் வரை, இருதய சிகிச்சை நிபுணரிலிருந்து கட்டிட கலைஞர் வரை, மழலைகள் முதல் மூத்தோர் வரை என அத்தனை பேருக்கும் தேவையான ஒரு பயிற்சியாக தியானம் உள்ளது.

தில்லை குருஜி கனிவான கணித ஆசிரியர் போல. அவ்வப்போது கண்டிப்பும் வெளிப்பட்டது. தியானம் காலை மாலை மற்றும் செய்யும் ஒரு பயிற்சி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை என்ற ஆப்தவாக்கியதோடு விடைபெற்றோம். தியான நிலையத்தை தாங்கள் திறந்து வைக்க வருவதை சொல்லி அழைப்பு விடுத்துள்ளார். ஒவ்வொரு முறை தியானத்தில் அமரும்போதும் புதியதொரு அனுபவம் கிடைக்குமாகையால் அடுத்த 40 நாட்கள் இரு முறையும் அதற்கடுத்த 6 மாதங்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையேனும் பயிற்சியை தொடர சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்.

வாழ்வு முழுமைக்கும் உடனிருக்கும் மூன்று தினங்களாக அமைந்த இந்நாட்களை வழங்கிய உங்களுக்கும் குருஜிக்கும், வகுப்புகள் சீராக நடைபெற ஒவ்வொரு அமர்வுக்கு முன் உழைத்த இரு நண்பர்களுக்கும் (பெயர் கேட்க மறந்துவிட்டேன்) மற்றும் பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும். 

அன்புடன்,

மனோஜ், திருவானைக்காவல் 


ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று  அகப்பயணம் – தியான முகாம் அனுபவங்கள் என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

தியானவகுப்பு- கடிதம்

தியானவகுப்பு- கடிதம்

December 7, 2024

நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை தியான வகுப்பு நடப்பதான அறிவிப்பு வந்தது.தியானமும் பயில  பல நாட்களாக எண்ணம் இருந்தது. நண்பரின் துணையும் கிடைத்தது. கூகிள் கோவையிலிருந்து நான்கு மணிநேரப் பயணம் என்றதால் முதல் நாளே கிளம்பிப் போகலாமா எனும் எண்ணம் எழுந்தது. நித்யவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அந்தியூர் மணியும் மாலையில் வரலாம் என அனுமதி தந்தார். இருட்டுவதற்குள் சென்று விடலாம் எனும் எண்ணத்தில் மதிய உணவினை முடித்ததும் கிளம்பினோம். 

 அந்தியூருக்கு எந்த திசையிலிருந்து வந்தாலும் சாலை நன்றாகவே இருக்கும் போல. கூகிள் வழிகாட்டியபடி குன்னத்தூர் கோபி வழியாக அந்தியூர் சென்று சேர்ந்தோம். கொல்லேகால் சாலையில் நகர எல்லையைத் தாண்டியதுமே வனத்துறையின் சோதனைச் சாவடி உள்ளது. எதற்கும் கொஞ்சம் வெயிட் இருக்கட்டும் என்று வெள்ளிமலை ஆசிரமித்திற்குச்  செல்கிறோம் என பதிலளித்துவிட்டு கடந்து சென்றோம். இனிய மாலையில் வனவிலங்குகள் சாலையைக் கடப்பதான எச்சரிக்கைகளை பார்த்தபடி ரசித்து பயணித்தோம். சில கொண்டை ஊசி வளைவுகளுடன் சிறப்பான சாலை. 

தாமரைக்கரையிலிருந்து வெள்ளிமலைக்கான சாலைதான் சிறிது பழுதடைந்துள்ளது. சாலை வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜல்லி பரப்பி இருந்ததாலும் ஆங்காங்கே சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த இடங்களில் மண்பாதையில் செல்லவேண்டி இருந்ததும் சிறிது கவலை அளித்தது. வழியில் சாலையோர மரங்களும் இயற்கை காட்சிகளும் கிராமங்களில் அய்யப்பன் ஆலயங்களில் பாடல்களும் இறுக்கத்தினை தளர்த்தின.  சாலலையிலிருந்து நித்தியவனத்திற்கு பிரியும் இடத்தை அடைந்தபோது சுமார் ஆறுமணிக்கே நன்கு இருட்டியிருந்தது. குறுகலான மண்பாதையில் செல்லும்போது கார் தரைதட்டி விடுமோ எனும் அச்சம் இருந்தது. அதற்குள் மணி அவர்கள் நாங்கள் வந்ததை தொலைவிலிருந்து பார்த்து வழி சொன்னார். அவர் சமையலுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வெளியே சென்றிருந்தார். நுழைவாயிலை ஒட்டிய வீட்டின் திண்ணையில் பேரனுடன் அமரந்திருந்த  காவல்கார முதியவர் உற்சாகமாக வரவேற்றார். மேடேறிச் சென்று முதலில் கண்ட கட்டிடத்தின் அருகில் கார் நிறுத்தினோம். சுற்றிலும் இருட்டு. பாதையிலும் கூட வளர்ந்து நிற்கும் புற்கள். காரை விட்டு இறங்க எனக்கு தைரியம் இல்லை. நண்பர் சகஜமாக கீழிறங்கி புதிதாக வாங்கிய கைபேசியில் படங்களை எடுக்கத் துணிந்தார். உள்ளே வந்து அமரும்படி அவரை வேண்டினேன். பூச்சி பொட்டு இருந்திச்சுன்னா?

சிறிது நேரத்தில் குருஜி செந்தில் பிரபு அவர்களும் வயநாட்டிலிருந்து பேரசிரியர் காந்தநாதனும் வெவ்வேறு கார்களில் வந்துசேர்ந்தனர். சிறிது ஆசுவாசமாக இருந்தது. மணியும் வந்து சேர்ந்தார். எங்களுக்கான தங்குமிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். கரடுமுரடான சரிவான பாதையில் இறங்கிச் சென்றோம். தங்குமிடம் ஒரு டார்மிடரி. எனது முதல் டார்மிடரி அனுபவம் இது. மூன்று ஓரங்களிலும் 2+3+3 என எட்டு இரண்டடுக்கு பங்கர் பெட் நடுவே வெற்றிடம்.  இங்கே எல்லாம் ஃபுல்லா பெட் போட்டிருவோம் என மணி சொல்ல எனக்கு இவ்வளவு கூட்டத்தில் எப்படி இருக்குமோ எனும் கவலையாக இருந்தது. மணியும் காந்தநாதனும் தீவிர தத்துவ விசாரத்தில் இருந்தனர். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். எட்டரைக்கு சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்து மணி சென்றார். எட்டரைக்கு சாப்பாட்டு அறைக்கு சென்றபோது வெளிச்சமும் ஆள் நடமாட்டமுமாக உயிர்ப்புடன் இருந்தது ஆறுதலாக இருந்தது. சுவையான இரவு உணவு (உப்புமா தான் என்றாலும்) மேலும் நம்பிக்கை அளித்தது. சிறிது நேரம் குருஜியுடன் பேசி விட்டு தங்குமிடம் வந்தோம். இப்பொழுது வழி பரிசயமானதால்  அச்சமளிப்பதாக இல்லை. காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து குளித்து முடித்து கும்பலை எதிர்கொள்ள தயாரானோம். வந்தவர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் இளைஞர்கள். அவ்வளவு பேர் இருந்தும் மிகவும் சுமுகமாக இருந்தது சூழல். காலை உணவின்போது அனைவரையும் பார்க்க முடிந்தது. சில பெண்களும் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பயிற்சிககென வந்திருந்தனர்.

வெளிச்சத்தில் பார்த்தபோதுதான் அந்த இடத்தின் நில அமைப்பினை பெரிதும் சிதைக்காமல் கட்டிடங்களை எழுப்பியிருப்பது தெரிந்தது.    

வந்திருந்த இளைஞர்கள் அனைவருமே தங்களது அலுவலகப் பணியில் வெற்றிகரமாக செயல்படுவதாகவே தெரிந்தது. தங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ள வந்திருந்தனர். பயிற்சி அவர்களுக்கு தேவையான உறுதிப்பாட்டினை அளித்துள்ளது என்பது நிறைவுக் கூடுகையில் அவர்கள் மனம் நெகிழ்ந்து பேசியதில் தெரிந்தது. குருஜி செந்தில் பிரபு அவர்களும் கோவையின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஆனந்த சைதன்யா  யோகா எனும் அமைப்பினை நிறுவி தியானப் பயிற்சி அளிக்கிறார். அவரது மையம் கோவை சரவணம்பட்டியை அடுத்த குரும்பபாளையத்தில் உள்ளது. அங்கும் பயிற்சிகள் நடைபெறுகின்றன. மிகவும் மென்மையாகவும் நகைச்சுவையாகவும் அதே நேரம் கண்டிப்பாகவும் பயிற்சியளித்தார். இரண்டாம் நாள் இரவுணவிற்கு பிறகு திரைப்பட  பாடல் ஜமா கூட்டினார் குருஜி. விஷ்ணுபுரத்தின் ஆஸ்தான பாடகர் என மணி அறிமுகப்படுத்திய யோகேஸ்வரன் மிக இனிமையாகப் பாடினார். அவருக்கு போட்டியாக குருஜியும் களமிறங்கினார். சுவையான உணவு படைத்த அம்மையார் உட்பட பலரும் உற்சாகமாக பங்கேற்றனர்.             

திரும்பி வர வேண்டிய நேரம் நெருங்கியதும் சாலை குறித்த கவலை என்னைப் பிடித்துக் கொண்டது. காலையிலிருந்தே மழை பெய்துக் கொண்டே இருந்தது. மதியம் மழை விட்டாலும் எந்நேரமும் வந்து விடுமோ என்றிருந்தது. அவசரத்தில் உடன் வந்த யோகேஸ்வரன் சாப்பிடாமலே கிளம்பி வந்தது மிகுந்த வருத்தமளித்தது. திரும்பி வரும்போது சாலை அவ்வளவு மோசமானதாக தோன்றவில்லை. பல இடங்களில் வேலை முடிந்து சிமெண்ட் சாலைகள் திறந்து விட்டிருந்தனர். எளிதாகவே முக்கிய சாலையை எட்டினோம். யோகேஸ்வரனின் தந்தையார் தான் தூரன் விழாவில் சிறப்பாக நாதசுரம் இசைத்த கலைஞர் என்பது  பேச்சினூடே தெரிந்தது. அவர் இனிமையாக பாடியதில் வியப்பென்ன! மிகவும் இனிமையான அனுபவமாக அமைந்தது வெள்ளிமலை நித்தியவன பயிற்சி. 

பின் குறிப்பு : நல்ல குளிரும் மழையும் இருந்தபோதும் இறுதி நாளில் மின்சாரம் தடை பட்டதால் பச்சைத் தண்ணீரில் குளித்தபோதும் கோவையிலிருந்து கிளம்புபம் போது வெகு நாட்களாக இருந்த இருமல் தியானம் முடித்து திரும்பும்போது இல்லாமலிருக்கிறது!!!

அரவிந்த் வடசேரி


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள் கடந்த நவம்பர் 29 இல் இருந்து டிசம்பர் 1 வரை ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில்‌ நிகழ்த்திய தியான வகுப்பில் பங்கேற்றவர்கள் தாங்கள் தியான வகுப்பில் கற்றுகொண்ட அனுபவங்களை கடிதம் வாயிலாக பகிர்ந்தனர். அவற்றில் இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 7 டிசம்பர், 2024 அன்று தியானவகுப்பு- கடிதம்  என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.

தில்லை செந்தில்பிரபு – கடிதம்

தில்லை செந்தில்பிரபு – கடிதம்
YouTube player

வணக்கம் 

அன்புள்ள ஜெ அவர்களுக்கு  ,

ஆர்வமுள்ளவர்களுக்கு  சிறந்த அறிமுக உரை  . முக்கியமான உடல் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு, பயிற்சியின் வாயிலாக அவை மேன்மை அடைவதும். பயிற்சியின் மூலம் வாழ்வின் அடுத்த பரிணாமம் நோக்கி செல்வது தியான மரபின் ஒரு வழிமுறை என்பது பற்றிய அறிமுக உரை மிகவும் நேர்த்தியாக அமைந்தது. மனதினுடைய தொடர் ஓட்டத்திற்கு உளம் குவிவதன் வாயிலாக ஆற்றலை உற்பத்தி செய்து புத்துணர்வுடன் அன்றைய நாளை நிறைவுடன் முழுமை செய்ய பயிற்சி கருவிகள் வாழ்வில் பெரிதும் உதவுவது பற்றியும் . உடலில் ஏற்படும் பதற்றம் பயம் போன்ற உணர்வுகள் செரிமான மண்டலத்தை பாதிக்கும் என்பது போன்ற ஆழ்ந்த பார்வை டிஎன்ஏ தொடர்ச்சியின் தொடர்பு பற்றிய தகவல் புதியவர்கள்  மற்றும் தியான மார்கத்தில் பயணிக்கும் அனைவரும் உணர்ந்து பயிற்சியின் வாயிலாக மேம்படுத்திக்கொள்ள உதவும்…

உடலுக்கு தூக்கம் இன்றியமையாதது போல மனதிற்கு தியானம் யோகம் போன்ற வழிமுறையின் முக்கியத்துவம் பற்றிய பார்வை நல்ல திறப்பாக அமையும் … சைதன்ய ஒளிக்கீற்றுஅனைவரின் உள்ளும் நிறைந்து ஒளிர தாங்களின் இந்த காணொளிக்கு குரு மரபிர்க்கும் ஜெ அவர்களுக்கும் , தாங்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .  குரு அவர்களின் தியான முறைகள் தொடர் பயிற்சியின் வாயிலாக  நிறைவுடன் வாழ்வை கணங்களில் கடந்து செல்ல பெரிதும் உதவும்.

ஒவ்வொரு சத் சங்கங்களிலும் புதிய கருவிகளை அருள செய்வார்கள். அவை அனைவருக்கும் தங்களுக்கு உரியதா என அவதானிக்கவும். அதன் அனுபவம் சார்ந்து  கலந்து உரையாடவும் சந்தேகங்களை குருவுடன் பகிர்ந்து கொண்டு மேம்படுத்தி கொள்ளவும் .. மாத மாதம் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது . இவை அனைத்தும் எனக்கு சாத்தியம் பெற  வாய்ப்பு அளித்த தங்களுக்கும் தாங்களுடன் செயலாற்றும் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள் ….

நன்றி ஜெ 

சிசுபாலன் கிருஷ்ணமூர்த்தி


எழுத்தாளர் திரு. ஜெயமோகன்

அன்றாட வாழ்வில் தியானம் எனும் தலைப்பில் தியானம் மற்றும் யோகக்கலை பற்றி திரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் காணொளி குறித்து திரு. சிசுபாலன் எழுதிய கடிதம் எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களது இணையதளத்தில் https://unifiedwisdom.guru/199538 கடந்த 4 ஆகஸ்ட் 2024 அன்று வெளியானது. இது அதன் இணையகட்டுரையின் தொகுப்பாகும்.

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

Coimbatore, 11 July 2024

YouTube player

A video talk of Shri.Thillai is released on the benefits of yoga and meditation practices and how to imbibe them in daily life by the Unified Wisdom initiative by Writer Jeyamohan.

“In this video, Thillai Senthil Prabu, founder of Ananda Chaitanya Foundation, with more than two and a half decades of meditation and yoga teaching experience, delves into meditation and its profound benefits. He explains the role of the parasympathetic nervous system, the impact of uncontrolled mental chattering on our physical health, and how meditation enhances focus, productivity, and alleviates pain and psychosomatic diseases. Additionally, he addresses the positive effects of meditation on sleep disorders.”

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

விவேகானந்தரைப் பற்றிய முதல் மனப்பதிவு பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் மிகச்சிறிய வயதிலேயே கண்ட நாள்காட்டிப் படங்கள் வழியாகத்தான் வந்திருக்கும். புகழ்பெற்ற அமெரிக்கப் புகைப்பட நிபுணர் தாமஸ் ஹாரிசன் 1893-ல் எடுத்த படம் அது. பக்கவாட்டில் சற்றே திரும்பி, காவிநிறக் கம்பளி உடையுடன், வங்காளத் தலைப்பாகையுடன் கைகட்டி நிமிர்ந்து நிற்கும் அந்தப் புகைப்படம், ஐந்து தலைமுறை காலமாக அளித்துவரும் தன்னம்பிக்கையை எளிதில் விளக்கிவிட முடியாது. வறுமையும் மிடிமையும் ஓங்கி, பட்டினியால் மூடியிருந்த ஒரு தேசம் நமது இந்தியா. தன்னம்பிக்கை குலைந்து உலகை அஞ்சி தனக்குள் சுருண்டுகொண்ட ஒரு தேசம். அதன் இளைஞர்கள் அந்தக் கண்களைப் பார்த்தபோது தங்களை உணர்ந்தனர். விவேகானந்தரின் அந்தக் கண்களில் தெரிந்தது, உலகை எதிர்நோக்கி தலைநிமிர்ந்து நின்ற இந்திய இளமையின் தன்னம்பிக்கை. அந்தப் படம் ஒரு பெரும் படிமம். ‘வா உலகே!’ என்ற அறைகூவல் அதில் இருந்தது.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி நூற்றுக் கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. அ.லெ. நடராஜன் எழுதிய ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நூல் முழுமையான அறிமுகம் எனலாம். பல கோணங்களில் விவேகானந்தர் விவாதிக்கப்பட்டிருக்கிறார். வேதாந்திகள், ஆச்சாரவாதிகள் எழுதிய நூல்கள். இடதுசாரிகளான ஜெயகாந்தன் போன்றவர்களின் சொற்கள். அனைவருக்கும் அவர் உத்வேகமளிக்கும் ஆளுமை. எம்.ஓ. மத்தாய் எழுதிய சுயசரிதையில் அம்பேத்கர் மத்தாயிடம் சொல்கிறார், “நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரில் இருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது” என்று.

விவேகானந்தர் மதச் சீர்திருத்தவாதி, சமூகச் சீர்திருத்தவாதி, தத்துவ சிந்தனையாளர். அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு ஞானி. ஞானிகள் நம் கையின் விரல்களைப் போல. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான பணி ஒன்று இயற்கையால் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப அவர்களுடைய இயல்பு அமைந்திருக்கிறது. சுட்டுவிரல் போல சிலர். கட்டைவிரல் போல சிலர். சிறுவிரல் போல சிலர். ஆனால், அனைவரும் சேர்ந்து அள்ளுவது ஒன்றையே. ஆகவே, ஞானி என்றால் இப்படித்தான் இருப்பார் என்று நம் சிறிய அறிவைக் கொண்டு வரையறை செய்துகொண்டால், அதன் இழப்பு நமக்கே. ஞானம் நோக்கிய நம் தேடலின் அந்தரங்கமே அவர்களை அடையாளம் காண முடியும்.

இந்தியாவில் ஞானிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ‘ஊரிடும் சோறு துணிதரும் குப்பை’ என வாழும் பல்லாயிரவர் இங்கே இருந்தார்கள். அவர்களில் ஒருவர் நம் மக்களை, நம் தேசத்தை, நம் பண்பாட்டை, நம் அரசியலை நோக்கித் திரும்ப வேண்டுமென விதி இருந்திருக்கலாம். அவ் வண்ணமே வந்த ததாகதர், விவேகானந்தர். இந்த தேசத்தைத் தளையிட்டிருந்த அடிமைத்தனமும் அதன் விளைவாக நிகழ்ந்த பெரும் பஞ்சங்களும் அவர் அப்படி வருவதற்கு நிமித்தமாயின. இந்த தேசத்தில் அளிக்கப்பட்டிருந்த ஆங்கிலக் கல்வி அதற்குக் கருவியாகியது. அன்று உருவாகிவந்திருந்த ரயிலும் அச்சும் அதற்கு வாகனங்களாயின. வந்துசென்றார் அவர். இந்த மண் துயில்விட்டெழுந்தது.

அதுவே விவேகானந்தரின் பங்களிப்பு. இந்த தேசத்தில் உருவான ஒட்டு மொத்த தேசியத் தன்னுணர்ச்சியின் விதை அவரே. பட்டினியாலும் பேத சிந்தனைகளாலும் செத்து மக்கிக்கொண்டிருந்த இந்தியாவைக் கண்டு அடைந்த அறச் சீற்றத்தின் அனல்தான் விவேகானந்தரிடமிருந்து வெளிப்பட்டது. “எழுக, விழித்தெழுக, குறிக்கோள்வரை அயராது செல்க” என்ற உபநிடத வரியை அவர் இந்தியாவுக்கு அளித்த ‘ஆப்தவாக்கியம்’ எனலாம்.

அவரது எழுத்துகளில் இருந்தே இந்த தேசத்தின் அனைத்து நவீன சிந்தனைகளுக்கும் தொடக்கப்புள்ளிகளைக் கண்டுகொள்ள முடியும். இந்தியாவின் நிலவரைபடம் பற்றிய ஒரு பிரக்ஞை அவரது எழுத்துகளில் ஓடுகிறது. அதுவே இந்தியாவுக்கு அவர் அளித்த முதல் கொடை. பத்ரிநாத்தில் இருந்து கன்னியாகுமரி வரை, ஆதிசங்கரர் சென்ற திசைக்கு நேர்எதிர் திசையில் அவர் பயணம் செய்தார். அவர் வழியாக அந்த வரைபடம் அவர் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பேசப்பட்டது. நவஇந்தியா என்ற கனவு அதனூடாக முளைத்தெழுவதை அவரைச் சந்தித்த ராஜம் அய்யர் போன்றவர்கள் எழுதிய குறிப்புகள் வழியாகக் காணலாம்.

இந்திய ஆன்மிக மரபு அன்று மத வழிபாடுகள், சடங்குகள் மற்றும் ஆசாரங்களுடன் பின்னிப் பிணைந்து கிடந்தது. அந்த சிக்கலைப் பிரித்து நோக்க முடியாமல், ஒட்டுமொத்தமாக அதை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு, புதியதாக உருவாக்கிவிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கும் பிரம்ம சமாஜம் போன்ற மத-சமூக சீர்திருத்த இயக்கங்களும், இந்திய ஞானமரபின் ஏதேனும் ஒன்றை மட்டும் மையமாக்கி, பிற அனைத்தையும் அதைச் சுற்றிக் கட்டி எழுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை கொண்ட ஆரிய சமாஜம் போன்ற இயக்கங்களும் அன்று இருந்தன.

விவேகானந்தரின் பங்களிப்பு என்பது இந்திய மெய்ஞான மரபின் சாராம்சமான விஷயங்கள் அனைத்தையும் அடையாளம் கண்டது. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொண்டது. அதை கம்பீரமான மொழியில் இந்தியாவை நோக்கிச் சொன்னது. இந்திய மெய்ஞானத்தின் மொழி அவர் வழியாகவே சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலமாக மாறியது என்று சொல்லலாம். மடங்களிலும் குருகுலங்களிலும் இருந்த வேதாந்தம் இந்திய இளைஞர்களின் தத்துவமாக ஆகியது.

இன்றும் இந்தியச் சிந்தனையின் ஒட்டுமொத்தத்தைப் பார்க்கும் ஒரு சிந்தனையாளர், விவேகானந்தரைத் தன் ஆசிரியராக அடையாளம் கண்டு கொள்வார். மிகச் சிறந்த உதாரணம், மார்க்ஸிய தத்துவ சிந்தனையாளரான கே.தாமோதரன். மார்க்ஸிய நோக்கில் இந்திய சிந்தனையை வகுத்துரைக்க முற்பட்ட அவருக்குத் தன் உடனடி முன்னோடியாக விவேகானந்தரே தோன்றினார். இடதுசாரிகள் இன்று விவேகானந்தர் பெயரைச் சொல்ல அவரே காரணம்.

விவேகானந்தர் இந்திய மறுமலர்ச்சியின் முதல் குரல். இடிந்து மக்கிய நமது கூரைமீது ஏறி நின்று, பொன்னிற உதயவானம் நோக்கிப் பொன்னிற இறகுகளை விரித்துச் சிறகடித்துக் குரலெழுப்பிய சேவல். இந்திய வரலாற்றாய்வின் மாதிரி வடிவம்பற்றி, இந்தியாவுக்கே உரிய கல்விமுறைபற்றி, இந்தியாவுக்கான வெகுஜன ஜனநாயக அரசியல்பற்றி முதல் சிந்தனைகளை அவரே முன்வைத்தார். இந்திய இலக்கியத்துக்கான முன்வடிவம்பற்றிப் பேசியிருக்கிறார். இந்தியக் கலைகளுக்கான அடிப்படை வடிவம்பற்றி விவாதித்திருக்கிறார். இந்தியாவுக்குரிய சுயமான கட்டடக் கலை பற்றியும், ஓவியக் கலை பற்றியும்கூட அவரே முதலில் பேசியிருக்கிறார். உதாரணமாக, இந்தியாவின் மாபெரும் முன்னோடிகள் பெரும்பாலானவர்கள். இந்திய ஓவியக் கலைக்கான அடிப்படைகளை உருவாக்கிய முதற் தூண்டுதலும் வழிகாட்டலும் அவனீந்திரநாத தாகூர் போன்றோருக்கு விவேகானந்தரில் இருந்தே கிடைத்தது.

இந்தியா என்றுமே ஞானபூமியாகக் கருதப்பட்டு வந்தது. மூத்தோரின் முதியோரின் தேசம், பழைமையின் தேசம் என்றே நம்மைப் பற்றி நாம் எண்ணியிருந்தோம். அந்த மனப்பதிவை உடைத்து பிறந்தெழுந்த இளைஞர் அவர். குழந்தைத்தன்மை நீங்காத அவரது அழகிய முகம், புதிய இந்தியாவின் சின்னமாகியது. இந்நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்தவர்கள், இங்கே உருவான புரட்சியாளர்கள், இங்கே கலையையும் இலக்கியத்தையும் உருவாக்கியவர்கள் பெரும்பாலானோர் இளமையில் தங்களை விவேகானந்தருடன் அடையாளம்கண்டிருப்பார்கள்.

இன்றும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணை கொண்டது.


எழுத்தாளர் திரு. ஜெயமோகன் 

இது எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் 8 ஜீன், 2024 அன்று  விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை என்ற தலைப்பில் வெளியான இணைய கட்டுரையின் தொகுப்பு.