நானும் என் மனைவியும் ஆகஸ்ட் 1 – 3 , 2025, நடந்த, இந்த வகுப்பில் கலந்து கொண்டோம். என் மனைவி இதற்கு முன்னால் எந்த தியான வகுப்பையும் சந்தித்தது இல்லை. மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கு இருந்த சிறு சிறு உபாதைகள் விட்டுப் போயின. மூச்சுக் காற்று சீராக ஓடுவதை பார்க்க முடிந்தது. அரை மனதுடன் வந்தவர், முழு நிறைவுடன் திரும்பி , சென்னை வந்த பிறகு, இந்த பயிற்சியை விடாது செய்ய , இருவரும், ஒருத்தருக்கு ஒருத்தர் உற்சாகப்படுத்தி செய்து வருகிறோம்.
ஆங்கிலத்தில் ” The Power of your Subconscious Mind ” என்று, ஜோசப் மர்பி எழுதிய புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். மனம் எவ்வளவு பெரிய பொக்கிஷம், அதை எப்படி கையாள வேண்டும் எல்லாம் எனக்கு அது உணர்த்தியது. ஆனால் எனக்கு, அந்த புத்தகம் கொஞ்சம் அந்நியமாகவே இருந்தது.
இந்த வகுப்பில், திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள், தனது சாந்தமான, கணீர் குரலுடன், எங்களுக்கு நாள் முழுக்க உத்தரவுகளை கொடுத்து, த்யானம், பிராணயாமா கற்றுக் கொடுத்து, ஒவ்வொருவரும் சரியாக செய்கிறார்களா என்று சரி பார்த்துக் கொண்டே இருந்தார். ஒருபுறம் எனக்கு, கண்ணதாசன் அவர்களின் “ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். யாரோ வருவார் யாரோ இருப்பார், வருவதும் போவதும் தெரியாது.” என்ற பாடல் மனத் திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
எண்ணங்களின் ஆற்றல், வலிமை, தாக்கம் ஆகியவற்றிற்கு இவ்வளவு அர்த்தங்கள் இருப்பதை இங்கு வந்து தான் உணர்ந்தேன். முதல் நாள் எங்கள் எல்லோருக்கும், கழட்டிய எல்லோரது காலணிகளை கூட ஒழுங்காக வைக்காமல் இருப்பதை உணர்த்தி, எந்தச் செயல் செய்தாலும் மனம் ஒன்று பட்டு செய்ய வேண்டும் என்பதை உணர்த்தினார். அடுத்த நாள், அலங்கோலமாக இருந்த காலணிகள் , அலங்காரமாக அடுக்கி வைத்திருப்பதை பார்க்க முடிந்தது.
புருவத்தில் இருந்து கால் நுனி வரை எங்களை பரவசப்படுத்தி, எங்கள் மனத் திரையை விலக்கி, மனதிற்கு பல அறைகள் இருப்பதை விளக்கி வைத்தார். நாம் எல்லோரும் பல பயிற்சிகள், பட்டங்கள் பெற்றிருந்தாலும், அவசியம் பயில வேண்டியது இந்த உளக்குவிப்பு பயிற்சி.
இந்த மேடையை வழங்கிய திரு.ஜெ அவர்களுக்கும், திரு.செந்தில்பிரபு அவர்களுக்கும் , இதை ஓருங்கிணைக்க உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், வந்திருந்த நண்பர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
ப ராமநாதன்
எழுத்தாளர் திரு. ஜெயமோகன்
இது கடந்த ஆகஸ்ட் மாதம் 1 – 3 , 2025, ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட ப ராமநாதன் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.
இந்த கடிதம் கடந்த 25 ஆகஸ்ட் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில்தியானமுகாம் – கண்டடைதல், நலமடைதல் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது
அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு.ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு…,
எனது பெயர் விஷ்வா வயது 22 திருவாரூர் இருப்பிடம் ஆகும். தற்போது கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயந்திரவியல் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறேன்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது நிறுவனத்தின் மூலமாக மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு தில்லை செந்தில் பிரபு ஐயா அவர்களின் ஆனந்த சைதன்யா தியான மையத்தின் இரண்டு நாள் உளக்குவிப்பு யோகா மற்றும் தியான வகுப்புகளில் பங்கேற்க எனக்கு வாய்த்தருளியது. சற்றும் யோசிக்காமல் பங்கேற்பாளராக சென்றேன். முதல் நாள் யோக வகுப்பில் யோகா அறிமுகமும், பிராணாயமங்களும், யோக பயிற்சிகளும் கற்றுக் கொண்டேன்.
அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும், வெளியுலகில் சிறந்து விளங்கவும், தனிப்பட்ட வாழ்வில் ஆகச்சிறந்த மனத்தெளிவுடனும், ஆற்றலுடனும் சிறந்து விளங்க அன்றாடம் நம்மிடத்திலும் வெளியுலகிலும் பயன்படுத்தக்கூடிய பல வாழ்க்கைக் கருவிகளை வகுப்பில் கற்றுக் கொண்டேன் புதிய மனிதர்களை அணுகுதல் ,கவனச் சிதறல் இல்லாமை போன்ற பல சாராம்சத்தில் பல தரவுகளுடன் கூடிய கருவியை சிறந்த முறையில் அன்றாட செயல்களில் பயன்படுத்தும் வழிமுறையை வகுப்பில் கற்றுக் கொண்டேன். இந்தக் கருவிகளை பயன்படுத்தி நான் அன்றாட வாழ்வில் பெற்ற பயன்கள் பல அதில் ஒரு சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்
தினம் தினம் கருவிகளை பயன்படுத்துவதில் என்னிடம் மாற்றத்தை உணர தொடங்கினேன் முன்பெல்லாம் நான் ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினால் இரண்டு வரிகள் படித்து புரிந்துவிட்டு மீதமுள்ள நான்கு வரிகளைப் படிக்கும் பொழுது கவனச்சிதறலால் அதன் அர்த்தத்தை உள்வாங்க முடியாத ஒரு நிலை இருக்கும் அதனால் அதனை மீண்டும் படிக்க வேண்டி இருக்கும், தற்போதெல்லாம் அந்த நிலையில் இருந்து முற்றிலும் வெளியேறிவிட்டேன், முழுமையான கருத்துக்களை கவனச் சிதறல் இல்லாமல் உள்வாங்க முடிகிறது.
நம் அன்றாட வாழ்க்கையில் மனதளவில் விழிப்புடன் இருப்பது என்பது மிகவும் குறைவாகவே இருக்கும் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் விழிப்புடன் இருப்பதற்காக பயன்படுத்தும் கருவியையும் பயன்படுத்தும் வழிமுறையையும் வகுப்பறையில் கற்றுக் கொண்டுதன் பலனாக ஒரு வேலையை அணுகும் போது அந்த வேலையில் துல்லியமான நுணுக்கங்களை கற்க முடிகிறது மற்றும் எளிதில் முடிப்பதற்கான ஆற்றலும் வருவதை உணர்கிறேன்.
அவ்வாறான தருணத்தில் நான் அந்த செயலில் என்னை எங்கெல்லாம் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உணர்கிறேன். இந்த அனைத்து கருவிகளும் ஆரம்ப நாட்களில் தினம் தினம் முயற்சி எடுத்து என் அன்றாட வாழ்வில் புகுத்திக் கொண்டு பயன்படுத்தி வந்தேன் ஆனால் நாட்கள் செல்ல செல்ல அன்றாட வாழ்வில் கருவிகள் ஒரு அங்கமாக மாறுவதை உணர்ந்தேன் தற்போதெல்லாம் ஒரு முயற்சி எடுத்து கருவிகளை பயன்படுத்தாமல் என்னுள் இயல்பாகவே கருவிகள் என்றும் செயலாற்றுவதை உணர்கிறேன்.
கடந்த ஆறு மாதங்களாக தினமும் காலை வேளையில் பிராணாயாமங்களும் யோக பயிற்சிகளையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன் இந்த பயிற்சிகளின் மூலம் பெற்ற பலன்கள் இதுவரையில் வேறு எதன் மூலமாகவும் பெறாதவையே ; இந்த பயிற்சிகளை எல்லாம் முடித்துவிட்டு வரும் அன்றைய பொழுது என்பது ஆழ்மனது அமைதியாகவும் எந்தவித தேவையற்ற எண்ண ஓட்டங்கள் இல்லாத ஒரு மனதாக அந்த நாள் முழுக்க இருப்பதை உணர்ந்தேன், நாள் முழுவதும் மிகுந்த ஆற்றலோடும் புத்துணர்ச்சியோடும் இருந்தது.
முன்பெல்லாம் உளச்சோர்வை உடல் சோர்வு என்று தவறாக எண்ணியிருந்தேன் இப்பொழுதெல்லாம் உளச்சோர்வு என்பது முற்றிலுமாக இல்லை தேவையற்ற பேச்சுக்கள், செயல்கள், தேவையற்ற எண்ணங்கள் தவிர்க்கும் ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது. முன்பெல்லாம் வெளிப்புற சூழலால் உருவாகும் சிறிய விஷயத்தை கூட மனதளவில் குழப்பிக் கொண்டு பெரியதாக என்னை நானே துன்புறுத்திக் கொண்டதை இப்போது உணர்கிறேன் தற்போதெல்லாம் எந்த விஷயத்தையும் மனதளவில் துன்புறுத்திக் கொள்ள முற்படுவதில்லை.
முன்பெல்லாம் ஓர் புதிய மனிதர்களை அணுகும் போது அவர்களின் ஆடை அலங்காரத்தினாலும் வாய்மொழியை வைத்து ஓரிரு நிமிடங்களில் அவர்களின் எண்ணத்தைக் கணிக்கக் கூடிய ஒரு சூழலில் இருந்தேன். தற்போதெல்லாம் முன் முடிவு இல்லாமல் ஒருவரை அணுகும் போது அவர்களின் முழுமையான கருத்துக்களை உள்வாங்க முடிகிறது அவர்களின் நல்ல கருத்துக்களை ஏற்றுக் கொள்வதற்கும் நடைமுறைப்படுத்திக் கொள்வதற்குமான சாத்தியங்கள் மிகவும் எளிதாக உருவாகிறது.
குறிப்பாக நான் ஆசிரியரிடம் பயின்ற தியானங்கள் மிகவும் சக்தி வாய்ந்த வகையாக அன்றாட வாழ்வில் அமைகிறது நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் வெளிப்புறத்தில் இருந்தோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையிலோ பொருளாகவோ செய்தியாகவோ நமக்கு வந்தால் மகிழ்ச்சி கொள்வோம் ஆனால் தியானம் செய்து முடித்த பின்பு அடுத்து வருகின்ற இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் எந்த ஒரு காரணமும் இல்லாமல் அளவற்ற மகிழ்ச்சியை உணர்கிறேன். என்னவென்று தெளிவுபடுத்த முடியாமல் மிகவும் மகிழ்ச்சியான ஒரு ஆற்றலும் இருக்கிறது அந்த நாள் முழுவதுமே மனம் இதமாகவும் அமைதியாகவும் உளச்சோர்வு இல்லாமலும் இருப்பதை உணர்கிறேன்.
இவையெல்லாம் அடுத்து எனது ஆரோக்கியத்தில் நான் முன்னேறியது விலைமதிப்பற்றது நான் கல்லூரியில் படித்த பொழுது விடுதியில் தங்கி பயின்றேன் அப்போது எனது உணவு முறை மிகப்பெரிய மாறுதலுக்கு உள்ளானது வெளிப்புற உணவக உணவை எடுக்கத் தொடங்கிய போது வயிற்றுப்புண் கூடவே தொடங்கியது. காலப்போக்கில் ஓர் ஆண்டுக்குப் பிறகு வயிற்றுப்புண் ஆறாமல் அடுத்த நிலைக்கு சென்றது உணவுக் குழாய் வால்வு தளர்ச்சி என்று மருத்துவர்களால் எனக்கு நிரூபணம் ஆனது ஆங்கிலத்தில் ஜி இ ஆர் டி என்பார்கள் இதன் பாதிப்புகளால் மூன்று வேலையும் உணவு எதுக்களிப்பு ,நெஞ்சு எரிச்சல் போன்ற இன்னல்களுக்கு ஆளானேன்
ஓராண்டு முழுவதும் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டேன், இதிலிருந்து குணமடையாமல் அடுத்த நிலையான மூச்சு திணறலுக்கு ஆளானேன். கல்லூரி காலத்தில் எனது துறையில் பல மேடைகளில் பேசுவது வழக்கம் ஆனால் இந்த மூச்சு திணறலுக்கு பிறகு இயல்பான தொடர் பேச்சு என்பது சாத்தியமில்லாமல் போனது பேசும்பொழுது மூச்சுத் திணறல் இருப்பதால் கடந்த 2024 ஆம் ஆண்டில் கல்லூரியில் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டேன் மருத்துவர்களின் மருந்துகளை மட்டுமே வழக்கமாக எடுத்துக் கொள்ளும் சூழ்நிலையில் இருந்தேன், ஆனால் மருத்துவர்கள் நிரந்தர தீர்வு இல்லை என்று உணர்த்திவிட்டார்கள் இந்த சமயத்தில் தான் இந்த யோக பயிற்சிக்கான வாய்ப்பு நல்கியது வகுப்பின் முதல் நாளில் நெஞ்சு எரிச்சல் போன்ற உணவுக் குழாய் சம்பந்தமான பிரச்சனை தீரும் என்று ஆசிரியர் சொன்னபோது எனக்காகவே வகுப்பு தொடங்கியது போல் இருந்தது.
நானும் பிரணாயமங்களையும் தியானத்தையும் சரிவர காலை வேலையில் செய்து வந்தேன் ஒரு 50 நாட்களில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டது முதலில் மூச்சு திணறல் நின்றது பல மாதங்களுக்குப் பிறகு நெஞ்சு எரிச்சல் போன்ற ஒன்று படிப்படியாக குறைவதை உணர்ந்தேன். தற்போது முற்றிலுமாக மூச்சு திணறலில் இருந்து விடுபட்டு சரியான உணவு முறைகளை கடைப்பிடித்து வருகிறேன் இந்த மாற்றம் என்பது எனது வாழ்வில் விலைமதிப்பற்றது தற்போது என்னால் இயல்பாக மேடைப்பேச்சுகளிலும் தொடர்ந்து இயல்பாக பேச முடிகிறது கடந்த மாதம் கோவையில் கவியன்புத்தூர் தமிழ்ச் சங்கத்தில் நாயன்மார்களைப் பற்றி அரை மணி நேரத்திற்கு மேல் நான் பேசிய உரை ஓராண்டு கனவு நிறைவேறியதாகவே இருந்தது.
இதனின் பல்வேறு பலன்களை ருசித்த பின் நித்தியவனம் மலை தங்குமிடத்தில் உயர்நிலை தியான வகுப்பு பங்கேற்க வாய்ப்பு நல்கியது அந்த மலைத்தங்குமிடத்தில் நான் பயின்ற உயர்நிலைப் பிராணாயாமங்கள் எண்ணற்ற அனுபவங்களையும் பயன்களையும் தந்து கொண்டே இருக்கிறது ஆசிரியரின் நேரடி பார்வையின் கீழ் கற்ற அந்த வகுப்புகள் மிகச்சிறந்த அனுபவத்தை தந்தருளியது.தொடர்ந்து பயிற்சியை முடித்து அனைத்து மாதங்களிலும் பயிற்சியை மேம்படுத்திக் கொள்ள நடைபெறும் வகுப்புகளும் கேள்வி பதில் நிகழ்வுகளும் எங்களை மீண்டும் இந்த பயணத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
வகுப்பில் நான் பயின்ற தியானங்களும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கருவிகளும் வாழ்க்கைக்கு சக்தி வாய்ந்த பலன்களை தருவதை இந்த ஆறு மாதத்தில் உணர்ந்தேன், வகுப்பு யோக பயிற்சிகளை மட்டும் சார்ந்து இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் மேம்படுவதற்கான பல வாழ்க்கைக் கருவிகளையும் சேர்த்து கற்றுக் கொள்வதால் மனதிற்கும் உடலுக்கும் தேவையான ஒரு முழுமையான பலனை அடைவதை உணர முடிகிறது
இத்தகைய வாய்ப்பை நல்கிய ஆசிரியர் திரு தில்லை செந்தில் பிரபு ஐயா அவர்களுக்கும் இதற்கான மிகச் சிறந்த சூழலை நித்திய வனத்தில் அமைத்த தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
விஷ்வா.உ,
கோயம்புத்தூர்.
இது கடந்த ஜூன் (2025) மாதம் 6,7 & 8 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட விஷ்வா.உ, கோயம்புத்தூர், அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.
இந்த கடிதம் கடந்த 9 ஆகஸ்ட் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில்யோகம் அளித்த மீட்பு எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது
From August 1 to 3, 2025, the serene heights of Vellimalai became the backdrop for a transformative three-day mountain retreat conducted by Thillai Senthil Prabu. Nestled amidst mist-kissed peaks and lush greenery, the program brought together 50 participants aged 13 to 65, representing a beautiful tapestry of life—IT professionals, corporate leaders, entrepreneurs, artists, homemakers, and students.
Over three days, participants immersed themselves in the stillness of the mountains, exploring meditation practices, yogic life tools, and self-awareness exercises designed to nurture clarity, emotional balance, and inner vitality. Each dawn began with gentle stretches and breathwork, flowing into deep meditation sessions, while evenings carried the soft silence of reflection and shared experiences.
For many, it was the first taste of true stillness; for others, a deepening of their inner journey. Insights bloomed, and the quiet beauty of Vellimalai offered a rare space to simply be.
This retreat was held as part of the Unified Wisdom Initiative envisioned by renowned writer Jeyamohan, for creating a space for learning art,literature,philosophy and yoga and meditation ,reaffirming the timeless truth that people from all walks of life can come together in pursuit of a shared inner awakening.
The following sharings are reflections from participants in the Aalam School Deep Focus Program held on May 30 & 31,2025. This program is designed to nurture concentration, inner clarity, and self-awareness through simple yet powerful practices rooted in ancient wisdom. Each sharing reflects a unique journey of discovery, discipline, and growth.
We thank the Manangment of Aalam school who also participated int he program for creating a path of inner peace and bliss for all its members .
Dear Senthil Sir, I want to extend my heartfelt gratitude for the transformative experience I had during the Deep Focus program. It was truly an eye-opener and an incredibly experiential journey.
One of the most valuable insights I gained was the importance of understanding and managing my energy. Learning how our consciousness and awareness shape our experiences has helped me see the importance of directing my energy toward the things that truly matter in life. I’ve come to realize how crucial it is to move away from negativity and instead focus on what uplifts and empowers me.
The program also taught me the significance of celebrating life in the present moment—no longer waiting for the “right” time to be happy. I now understand that the key to my happiness lies within me, and that being aware of my emotions and understanding where they are leading me is essential to my well-being.
The tools and techniques shared during the sessions are already making a difference in how I approach daily life, and I am confident they will continue to improve the overall quality of my life.
Thank you once again for guiding us with such clarity and depth. It was a meaningful and enriching experience.
Warm regards, Geetha Sivaji
This session really touched something within me. I felt so connected to the idea of being fully present and simply embracing each moment as it comes. It reminded me of how naturally I try to see the good in people and situations, and how much I enjoy bringing happiness and positive energy to those around me. This session helped me appreciate those parts of myself even more. It felt like a gentle nudge to keep living with awareness, kindness, and acceptance.
Priya Shivakumar
It was a calm and relaxing session, free from the usual mind chatter. The deep focus created a space for true self-reflection, beautifully supported by meditation, Pranayama, kriyas, and Yoga Nidra. The most valuable takeaway was the experience of truly living in the present moment. Thank you for such a beautiful and transformative session.
Radhika Suresh Kumar
Deep focus program has made an impact in my daily life.Three take aways that I have been practising since the commencement of the program is –
1.One task at a time
2.Say no to multi tasking
3.Do not give the key to your happiness into others hands.
My mind has relatively been calmer since I am not thinking of too many things at the same time and have been living in the moment trying to enjoy the little joys of life.
Thank you sir for giving us a good start for the year.
Priya Stanley
“The Deep Focus session was a wonderful experience. I truly enjoyed the session and learned the power of living in the moment. It helped me slow down, be more present, and focus on what really matters. A simple yet powerful reminder to be mindful — I’m grateful for this experience.”
Ramya V
It was a stimulating session that provided fodder for thought in many ways. At the same time, it gave a lot of practical ways to bring back focus into our lives and our relationships. I liked the way the session was handled in taking us from one topic to another by asking leading
Nithya Raj
It was a peaceful experiental wellness program with key elements needed for both the physical and mental betterment of oneself. The Dhyaana session was a refreshing experience. The talks on emotional balance and happiness quotient was great takeaway for me. Thank you.
Shanthini aswin
During these two days of class, i learned all the asanas and understood the importance of undivided attention. Through this event, i learned how deeply we should enjoy each and every moment.
Kalpana.k
Through this deep focus class, i found the breathing exercise was very beneficial for my health and especially helpful in relieving my headaches.I thought i had been doing multitasking for the past few years, but through this class i undertstood what i am doing is multiple tasking and this understanding has really helped me.
Venkateswari
This program helped me a lot. It focused on meditation, talks about personal growth, and easy exercises for the body. It helped me feel more calm and focused from the inside. I noticed that my mind became clearer, and I felt more peaceful. It also helped me with some health problems like stress, headaches etc
Subashini.K
The Deep Focus program brought an awareness about enjoying the present(Now moment) that I can practically implement with mindfulness. A profound understanding about multiple tasking and doing one at a time completely.
Stanley S
The Deep Focus session was genuinely eye-opening. It reminded me of things I already knew deep down but often forget in the rush of daily life. What stood out the most was the importance of being fully present-living in the moment and giving undivided attention to whatever I’m doing. That really stayed with me.
One moment that had a deep impact on me was when I asked you a personal question, how to deal with the pain caused by someone. The way you responded was something I had never heard before: not to forget or suppress, but to accept and move on. You said that some pain is inevitable, and that really shifted something in me. It wasn’t the usual advice, and while it’s not easy, it felt real.
SHILPA MOHANDAS
It was a meaningful experience through this session in the Deep Focus program. This session guided me with patience and clarity, and I truly felt seen and heard throughout. helped me to understand how important deep focus not just in learning, but in truly experiencing each moment. The reflections, the silence, the thoughtful activities all of it helped me connect more deeply with myself and others.
It wasn’t just a workshop; it felt like a personal journey. That made it possible for me to go inward and observe myself with care and honesty.
Sreeja
The session was very insightful. The methods discussed were simple and can be followed by anyone. Yet, Consistency plays a major role. I am doing once a day since we started. I also apply the mindfulness during regular routine. Thanks for the opportunity.
Anusha
Deep focus program was truly transformation I came away with not only a deeper understanding of our world but also practical tools for making a positive impact within my community thank u so much sir
S Kousalya
The deep focus session was useful for me in various aspects. I’ve understood the intricate relationship between mind and body. The importance of awareness and to be present in the moment without channeling our energy into past and future thoughts was much needed for me. Also the understanding that we’re not the emotions that we feel, it is just a part, has opened a new perspective for me. I got to know ,by doing the activities mindfully,by giving it just the deserving time can save a lot of energy and can give better outputs. Grateful to be a part of it.
Amritha Varshini R
I had a unique and enriching experience over the past two days. For a change, I spent meaningful time focusing entirely on myself. During these sessions, I learned how to maintain emotional balance and develop deep focus and concentration. I was reminded that the present moment is truly all we have—and it’s essential to make the most of it.
I gained valuable insights into the difference between multitasking and handling multiple tasks efficiently. I also learnt meditation, practical exercises and yogasana that are particularly helpful for managing back pain.
One of the key takeaways for me was the importance of prioritizing tasks based on what truly needs attention first.
Thank you for this opportunity and the learnings that came with it.
Kavichitra PS
Your session in the Deep Focus program made a real difference for me. You created an environment that was both structured and supportive, which helped me stay accountable and truly focus. The way you guided us, with clarity, patience, and genuine care has kept me engaged and motivated throughout. I’ve never felt more productive or intentional with my time, and that’s thanks to your approach. I really appreciate the balance you struck between encouragement and discipline. It worked. Thank you.
Priya Dharshini R
Through the session regarding “Deep Focus”, I was able to understand the human ability to be aware of one’s inner self and the means of making it possible.
I also understood that the breathing is directly related to the emotions we feel and it can be regulated with the pranayamas that we practiced today.
The ideas of being present at the moment and being mindful of what is happening right now rather than past or future thoughts was something that resonated with me a lot.
The power to harness our awareness lies within ourself. Therefore, I learnt to use the “shakti” for all the positive things in life.
Not only these, but I was able to know a lot of things about myself after the session and to use the invaluable tools to attain deep focus.
Happy to be a part of the session.
Prateeksha
It’s very useful for me, I can focus on my work, and I did yoga it feel more relax in my mind thank you sir.
Vijaya Lakshmi.K
The session was very informative and made me realise how even in simple everyday chores, we can be mindful. Thanks for the insight
Saranya Mohan
The session was too helpful, very easily it was taught using the tools.
Mredhula.R
Thank you for Deep Focus program.
The carnatic music was wonderful.
The life lesson makes me feel good in all walks of life.
The meditation and pranayama gave a peaceful mind, while doing it.
This is making me a calm and healthy person.
Sri Janani S.
Hello Sir, The session was very deep and I am doing the exercise and trying my best to inculcate the practices.living the moment and being self aware are some of the points that really amazing and it was a wonderful workshop.Thank you
Suganthi
Respected Thillai Senthil sir,
The Deep Focus program was indeed an eye-opening session for me. I received wonderful guidance from you sir. It was fascinating to learn more about the functionality of the mind and body. The asana and meditation practices you taught were effective. I felt mentally relaxed and more confident after the meditation. I would like to thank you from the bottom of my heart.
PRABAKARAN C
Sir, I attended the deep focus program on the first day due to unavoidably circumstances I could’nt attend the second day. The thought you shared saying that “this moment is only true “ made me be happy and not to think much about past or over think about future . I am trying to practice the meditation too. Thank you sir.
Priyadarshini Uthayakumar
Your session was simple and to the point. The purpose was pitched in clearly and we got to experience some good moments during the process
இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதனுடன் இந்த புதிய பயிற்சிகளை செய்து வருவது மிகுந்த அமைதியையும் உளக்குவிப்பையும் கொடுக்கிறது.
சைதன்ய சுவரூப தியானம் இந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த ஐந்து நாட்களாக வேலையிலும் வாசிப்பிலும் வெகு நாட்களாக செய்யாமல் இருந்த பல வேலைகள் நேர்த்தியாகவும் முழு ஈடுபாட்டுடனும் செய்து வருகிறேன். தன்னம்பிக்கை அதிகம் ஆனதை போல் உணர்கிறேன், முழு மனதுடன் செய்யும் செயலில் தன்னம்பிக்கை நிச்சயம் கூடும் என தெரிகிறது. வாழ்க்கை இனிமையாக ஆனதை போல் உணர்கிறேன்.
உங்களுக்கும் குரு தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இப்படிக்கு,
அருண் ஆனந்த்
அன்புள்ள அருண்,
யோகம் தியானம் போன்றவற்றின் சிக்கல் என்னவென்றால் அவற்றை தொடர்ச்சியாகச் செய்பவர்கள் அடையும் பயன்களை அவற்றை செய்யாதவர்களுக்கு புரியவைக்கவே முடியாது என்பதுதான். அவர்களுக்கு அவை மிகையாக, விருப்பக்கற்பனையாகவே தோன்றும். மனமும் உடலும் ஒன்றே என உணர்ந்தவர்களுக்கு அதன் தர்க்கம் புரியும்.
ஜெ
இது கடந்த ஜூன் (2025) மாதம் 6,7 & 8 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திரு. அருண் ஆனந்த் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.
இந்த கடிதம் கடந்த 27 ஜூன் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் இரண்டாம்நிலை யோகம், கடிதம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது.
முதல் நிலைப் பயிற்சி வகுப்பினால் கிடைத்த உடல் மற்றும் மனநிலையின் முன்னேற்ற அனுபவமும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும் ஜூன் 6,7,8 தேதிகளில் வெள்ளிமலையில் குரு தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள என்னை வெள்ளிமலை நோக்கி செலுத்தியது. இந்தமுறை உடன் வருவதாகச் சொன்ன வழித்துணை நண்பர் ‘நழுவிவிட’ தனியளாக என் பயணம் தொடர்ந்தது. புதுவை–வெள்ளிமலை வழி தெரிந்து விட்டதால் போனமுறை இருந்த பயம் விலகிவிட்டது. வயது அறுபத்தியிரண்டு. இன்னும் போகவேண்டிய தூரம் எவ்வளவு எனத் தெரியாது. பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர ஏதேனும் ஒரு பற்றுக்கோடு வேண்டுமே! மகள், மகன் அவரவர்களின் குடும்பம் சார்ந்த பொருளாதாரத் தேவைக்களுக்கான இடப்பெயர்வுகளும், சூழ்நிலைகளும் என் போன்ற பெற்றோரை ஏதேனும் ஒன்றை இழந்தாற்போல எண்ணச் செய்கிறது. முகம் பார்த்துப் பேச, சிரிக்க, சிறுசிறு சண்டையிட பேரப்பிள்ளைகளை ஆரத்தழுவி முத்தமிட இனியில்லை என்ற எண்ணம் வாழ்க்கையை வெறுமை ஆக்குகிறது. வயதான காலத்தில் எல்லா கணவன்மார்களுக்கும் ‘நம்மைப் பார்த்துக் கொள்ள ஒருத்தி இருக்கிறாள்’ என்ற எண்ணமே கவலையற்ற நிம்மதியான வாழ்வைத் தருகிறது. அதேநேரத்தில் எல்லா மனைவிமார்களுக்கும் நாம் யார்? நமக்கு என்ன வேண்டும்? நம்முடைய விருப்பம் என்ன? மற்றவர்களுக்காகவே வாழ்ந்திருக்கிறோமே, அவ்வளவு தானா வாழ்க்கை? என்ற கேள்வியே எழுகிறது. இப்படித்தான் நான் வெண்முரசுக் கூடுகைக்குள் வந்தேன். அங்கிருந்து வெள்ளிமலை. வாசிப்பு என்ற சுவாசம் காட்டிய வழி இது! ஒரு வாசிப்பனுபவம் எனக்கு அளித்த பெருங்கொடை, உளக்குவிப்பு தியானப் பயிற்சி என்றே சொல்வேன்.
முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று புத்தர், வாக்தேவி வழிபாட்டு முறைமைகளுக்குப் பின் வகுப்பு தொடங்கியது. சுய அறிமுகம் முடிந்தப்பின் முதல்நிலைத் தியானப் பயிற்சியில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிரும்படிச் சொன்னார் குரு தில்லை செந்தில்பிரபு. இந்த முறையும் கணிசமானவர்கள் இளைஞர்கள். என் வயதுடையோர் நான்கைந்து பேரே இருந்தோம். மின்னனுக் கருவிகளின் பாதிப்புகளையும், அதனூடான அவர்கள் வாழ்க்கைமுறை, அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், முதல்நிலை வகுப்பில் அடைந்த பயன்களையும் இளைஞர்கள் பகிர்ந்தனர். பசியின்மை, தூக்கமின்மை, உளக்குவிப்பு சார்ந்த பிரச்சனைகளைக் கூறினர். இவர்களுக்கு நோய் என்ன எனத் தெரிந்திருக்கிறது. அதற்கான மருந்தைத், தீர்வை நாடியே இங்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் இருவர் மருத்துவர்கள். நோய் தீர்ப்பவர்களே இவர்கள்தானே? இவர்கள் எங்கே இங்கு என்று எனக்குள் ஒரு கேள்வி! ‘நாங்கள் நோய்க்கு மருந்து கொடுக்கிறோம்தான். ஆனால் அது அப்போதைக்கான தீர்வு மட்டுமே. நிரந்தரமான தீர்வு என்பது நோய்முதல் கண்டடைவதே. அது மனம் சார்ந்ததாக இருக்கிறது. மனதை சரிசெய்தால் நோய் தீரும் என்று சொன்னாலும் மக்கள் கேட்க மாட்டேன்கிறார்கள். உடனடி பலனே அவர்கள் எதிர்பார்ப்பது’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘நோயாளியின் அனைத்து நிலைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிற என்னுடைய மனப்பான்மையினால் அவர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டியுள்ளது. அதற்காகவே வந்தேன்’ என்றார். இளைஞர்கள் பலர் வயிறு சார்ந்த பிரச்சனைகள் முன்பைவிட இப்போது சரியாகி இருப்பதாக கூறினார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட குரு ‘பார்த்துக்கலாம்’ என்று ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு வகுப்பை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
மனம் அதன் செயல்பாடுகள், புருஷன், மூலபிரக்ருதி, புத்தி, அகங்காரம், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், சத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள். அவற்றின் மூலமாக பிரபஞ்சத்தை அடைதல், மகத், ஐந்து தன் மாத்திரைகள், ஐந்து பருப்பொருட்கள், ஐந்து புலன்கள், மனம், புத்தி என இருபத்து ஐந்து தத்துவங்கள் அடங்கிய சாங்கிய தரிசனத்தில் சொல்லப்பட்டவற்றை விளக்கினார். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல்தான் இருந்தது. இந்த இருபத்து ஐந்து தத்துவங்களைப் பற்றி முன்பு ஒருமுறை நண்பர் அரிகிருஷ்ணன் ‘பனிரெண்டாவது பகடை’ (புதுவை வெண்முரசு கூடுகை) பேசுபகுதியில் உரையாற்றியது நினைவுக்கு வந்தது. ஏதாவது புரிந்ததா என்றார் குரு. சிலர் இல்லையெனவும், சிலர் ஆமாம் எனவும் சிலர் ஏதுஞ் சொல்லாமலும் இருந்தனர். ‘புரிந்தால் மிக நல்லது, புரியாவிட்டால் மிக மிக நல்லது’ என ஆசிரியர் சொன்னதும் வகுப்பில் நகைப்பொலி எழுந்தது. மதியம் உணவு இடைவேளையின்போது, இந்த தத்துவக் கருத்துகள் எனக்குப் புரியவில்லையே என நான் தோழியிடம் சொல்ல அவள் ‘நீங்கள் ஒருமுறை ‘ஜெ வின் தத்துவ வகுப்புக்கு வாருங்கள் மிக மிக எளிமையாக புரியும்’ என்றாள்.
அன்றைய மாலை வகுப்பை நீங்கள் யார்? என்ற கேள்வியோடு துவக்கினார் ஆசிரியர். நாங்கள் அவரவர் பெயர்களோடு சொன்னதும் கேள்வியை வேறொரு கோணத்தில் முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினார். இரு குழுவாக பிரிந்து பதில் அளித்தடன் ஒவ்வொன்றாக விளக்கி, ஒவ்வொன்றாக உடைத்து எது நிலைக்கும்? எது வாழும் எது வீழும் என தத்துவம் சார்ந்து விளக்கினார். “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து இரு கைகளிலும் பால் நிறைந்து பொங்குவதாக கற்பனை செய்யுங்கள்! இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் வழங்குவதாக நினையுங்கள்! உங்களின் கருணையும் அன்பும் பெருகிச் செல்வதை கற்பனை செய்யுங்கள் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதும், நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும் நம் மனதைத் தூய்மைப்படுத்துகிறது” என்று கூறினார். “அறுகுளத்து உகத்தும் அகல்வயல் பொழிந்தும் வரையா மரபின் மாரிபோல” என்ற பாடலை நினைத்துக் கொண்டேன்.
அடுத்த நிகழ்வில் நமது உடலின் ஆற்றல் மையங்களையும் விழிப்புணர்வு, தூக்கம் கனவு, துரியம் பற்றியும் விளக்கி, ஆற்றல் மையங்கள் சமநிலையில் இல்லாதபோது உடல்ரீதியான, மனரீதியான சிக்கல்கள் ஏற்படுதல், இவற்றை சமன் செய்யவே யோகா, தியானப் பயிற்சிகள் என்பதையும் விளக்கினார். ‘உங்களுக்குள் நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் உயிர்சக்தியின் ஒரு வெளிப்பாடுதான்’ என்று கூறினார். முதல்நாள் வகுப்பே சற்று ‘கனமானதாக’ உணர்ந்தோம்.
இரண்டாம் நாள் வகுப்பு ஆரம்பகட்ட பிராணாயாமத்திலிருந்து இன்னும் மேம்பட்ட, ஆழ்நிலை கொண்ட பிராணாயாம வகுப்பாக அமைந்தது. கபாலபதி, ஷீத்தலி பிராயாணாமங்களையும், உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணைந்து பிரபஞ்ச சக்தியை அடைவதற்கான படிநிலைகளைக் கொண்ட சில பிராணாயாமங்களையும் தியரிநிலையில் மட்டுமின்றி அவரே செய்து காட்டி விளக்கினார். பிராணன் செயல்படும் விதங்களையும், அதன் பலன்களையும் தெளிவாக விளக்கிக் கூறினார். அந்தந்தக் கணத்தில் வாழ்தல், நிகழும் அனுபவங்களை ஆராயாமல் அதனை உற்று நோக்குதல், எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி இருத்தல் இவைகள் உணர்வுநிலையில் உங்களின் மேம்பட்ட தியானத்திற்கு வழியமைக்கும் என்றார்.
சற்றுநேர இடைவெளிக்குப் பின்னரான நிகழ்வில் மிகவும் சக்திவாய்ந்த சைதன்ய சொரூப தியானமுறையை (துரியநிலை தியானம்) கற்றுக் கொடுத்தார். முதல்நிலைத் தியானப் பயிற்சி வகுப்பில் கற்பித்த யோகா மற்றும், தியானப் பயிற்சியால் எங்களில் பலர் பலன் அடைந்திருந்தோம். இந்த முறை இத்தியானத்தின் சிறப்புகளையும், உடல்நிலையில் உணர்வு நிலையில், சக்தி நிலையில் இத்தியானம் எவ்வளவு ஆற்றலை எங்களுக்கு அளிக்கும் என்பதையும் கூறினார். புருஷன் என்ற விழிப்புணர்வை உணருவதற்கான படிநிலைகள் இந்த இரண்டு நாட்களும் கற்பிக்கப்பட்டது என்பதை இத்தியானத்தில் அமர்ந்தபோது உணர்ந்தோம்.
இதற்காக நாங்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். மூன்று குழுவினரையும் தனித்தனியாக அழைத்து அவரவர்களுக்கான மந்திரச் சொல்லை ஆலமரத்தடியில் அமர்ந்து உபதேசித்தார் குரு தில்லை செந்தில் பிரபு. யாரும், எதையும் யாரிடமும் பகிர்தல் கூடாது, கண்ணொடு கண் நோக்காமை, வாய்ச்சொற்கள் இலாமை என்ற கட்டளைகளை ஏற்று தியானத்தில் அமர்ந்தோம் நாங்கள். இத்தியானத்தின் அனுபவம் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. அமர்ந்த சில நிமிடங்களிலேயே உடல் என்ற பருப்பொருள் அங்கிலாததான, தன்னை மறந்த நிலை அது கனவா, இல்லை நினைவா என்று தெரியாத நிலையை அடைந்தேன். இனிப்பு சாப்பிட்ட பின்னும் நாக்கின் அடியில் ஓரு தித்திப்பு தங்கியிருக்குமே அது போல தியானம் முடிந்து கண்ணைத் திறந்த பின்னும் உடல் முழுவதும் ஒரு பரவசநிலை பரவியிருந்ததை அறிந்தேன். குரு அனைவரிடமும் பின்னூட்டம் கேட்டுக் கொண்டு என்முறை வந்தபோது நான் சொன்ன பதில் ‘சுகமாயிருந்தது; என்பதே! யாரிடமும் பகிராத எங்களின் அகம் மட்டுமே அறிந்த அந்த மந்திரச்சொல் எங்களுக்கு மட்டுமானது. அச்சொல்லை விட மேலானது அந்த தியானம் எனும் பெரும் நிதியம். இரண்டாம் கட்ட இப்பயிற்சியைத் தவறவிட்டவர்கள் இப்பெரும் நிதியை தவறவிட்டவர்கள் ஆவர்.
இதில் சிறப்பாக நான் உணர்ந்த விஷயம் என்னவென்றால் இரண்டு கட்டப் பயிற்சிகளிலும் எங்களை உடற்பயிற்சி, யோகப் பயிற்சி, தியானப்பயிற்சி என அகமும் புறமும் தயார் செய்து, அந்நிதியைப் பெற எங்களைத் தகுதியுடைவர்களாக்கி விலை மதிப்பற்ற பொக்கிஷத்தை அளித்ததை என்னவென்று சொல்வது? பிராணாயாம நிலையில் உடலைத் தூய்மைப்படுத்தியும், உணர்வுநிலையில் மனதைத் தூய்மைப்படுத்தியும், சக்தி நிலையில் எங்களின் உள்சக்தியை மேம்படுத்தியதையும் உணர்ந்து வியந்தோம். ‘சில பயிற்சிகள் செய்யும்போது எப்போது முடியும் என்றிருக்கும். இப்பயிற்சி மட்டுமே எப்போது ஆரம்பிப்போம் என எண்ண வைத்தது; எனப் பலரும் பின்னூட்டத்தில் கூறினார்.
மறுநாள் வழக்கம்போல் காலைநேர யோகா பயிற்சி, பிராணாயாமப் பயிற்சி, தியானம் என முதல் கட்ட நிகழ்வு முடிந்தது. இரண்டாம் கட்ட நிகழ்வில் அவரவர்கள் மூன்று நாட்களாக நடைபெற்ற அனுபவங்களைப் பகிர்ந்தனர். என் அனுபவங்களைக் கூறிய பின்னர் அங்கிருந்தவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ‘உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களையும் குறிப்பாக உங்கள் வீட்டின் பெண்களையும் இந்த உளக்குவிப்பு தியானப் பயிற்சி வகுப்புக்கு அழைத்து வாருங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசாக இருக்கும்’.
யோக தரிசனத்தின் நோக்கம், அத்தரிசனத்தை உணர்த்துவதற்காக கற்பிக்கப்பட்ட படிநிலைகள் இத்தனையும் கற்று நாங்கள் அடைந்த சைதன்ய சொரூப தரிசனம் மாபெரும் நிதியம்! உயிர் எத்தன்மைத்து என்று கேட்டால் என்ன சொல்வோம்? ‘அது உணர்தல் தன்மைத்து’ ஆம்! தியானமும் உணர்தல் தன்மைத்தே! அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்.
இராச. மணிமேகலை
இது கடந்த ஜூன் (2025) மாதம் 6,7 & 8 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திருமதி. இராச. மணிமேகலை அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.
இந்த கடிதம் கடந்த 3 ஜூலை 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் உயிர் எத்தன்மைத்து? எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது
மார்ச் 8-10 2024 தேதிகளில் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சி செய்யத் தொடங்கி 11 மார்ச் 2025தோடு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்தது (மார்ச் 12 2024ல் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன்). இந்த ஒரு வருடத்தில் 15ல் இருந்து 20 (அதிகபட்சம்) நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பயிற்சியை விடாமல் செந்திருக்கிறேன்.
இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள், கிட்டத்தட்ட எல்லா மாதங்களிலும் வெளியூர் பயணங்களுக்கு இடையிலும் தவறாமல் பயிற்சி செய்ய முடிந்திருப்பதே பெரும் நிறைவைத் தருகிறது.
– சூரிய நாராயணன்
இது கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் 8,9 &10 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திரு.சூரிய நாராயணன் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்ட தியானபயிற்சிகளை கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக பயிற்சி செய்து அதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.
இந்த கடிதம் கடந்த 8 ஏப்ரல் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் உளக்குவிப்பு- கடிதம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது
பிப்.28, மார்ச் 1,2 தேதிகளில் உளக்குவிப்பு பயிற்சி வெள்ளிமலையில் என்ற அறிவிப்பு உங்கள் தளத்தில் கண்டேன். சென்ற வருடமே கிளம்ப ஆயத்தமாகி இந்த முறை கைகூடியது. நெடுநாட்களாக தூக்கமின்மை, மனம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். புதுவையில் இருந்து யார் யார் வருகிறார்கள் என்று தெரியாத நிலையிலும் தனி ஒருத்தியாக வெள்ளிமலை கிளம்பிவிட்டேன். வாட்ஸ்அப் குழு 5 நாட்கள் முன்னதாக Open ஆனபோது யாருமே புதுவையில் இருந்து வெள்ளிமலைக்கு கிளம்புவதாக அதில் தகவல் இல்லை. கணவரும் மகனும் போருக்கு அனுப்புவது போல இரவு 11.00 மணிக்கு Sleeper Coach பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர். ஏறி உட்கார்ந்ததும் போனைப் பார்த்தால் வாட்ஸ்அப் குழு பரபரத்து கிடந்தது. ஈரோடு ரயில்வே ஸ்டேசனில் இருந்து அந்தியூர் வரை TT-ல் யாரெல்லாம் வருகிறீர்கள் என் ஓட்டெடுப்பு வேறு போய்க் கொண்டிருந்தது. சென்னை, பெங்களுர், ஓசூர், தஞ்சாவூர், நாகர்கோவில், சேலம், காஞ்சிபுரம் இடங்களில் இருந்து வருகிறோம் எனப் பலரும் பதிவிட, ஒருவர் நான் பைக்கில் வரேன் என்கூட யார் வரீங்க…. என்பன போன்ற தகவல்களால் தகித்தது குழு. அட்மினும் ஒருவருக்கொருவர் சேர்ந்து வாருங்கள் என எச்சரிக்கை விடுத்து கொண்டிருந்தார், நான் ஒருத்தி மட்டும், “ஹலோ! யாராவது என்னை பைபாஸில் Pickup பண்ணிக்கிறீர்களா” எனக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன். பவானி பைபாஸ் எங்கே இருக்கு? அந்தியூர் எங்கே இருக்கு? ஈரோடு ரயில்வே ஸ்டேசன் எங்கிருக்கு? என எதுவும் தெரியாமல் போகும் இடம் பற்றிய கனவுகளோடு 4.15 மணிக்கு பவானி பைபாஸில் வந்து இறங்கினேன். வாயிலே இருக்கு வழி என்பார்கள். உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்தான். (நான் என்ன Sixteen ஆ Just Sixty!) ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’. தெய்வம் போலீஸ்காரர் வடிவில் வந்து அந்தியூருக்கு பஸ் ஏற்றிவிட்டது. காந்தியடிகள் சொன்னது போல் (என்றைக்கு ஒரு பெண் தன்னந்தனியாக…) 28.02.25 அன்றுதான் இந்திய சுதந்திர தினம். அந்தியூர் இறங்கினால் அங்கே நித்யவனம் செல்லும் தெய்வங்கள் எனக்கு உதவி பண்ண, அந்தியூரிலிருந்து வெள்ளி மலைக்கு பேருந்தில் ஏறி அமர்ந்து பெருமையோடு முதல் பஸ் பிடித்துவிட்டேன் என்று குழுவில் பதிவிட்டேன்.
விரையும் தோட்டங்களை, பனியில் நனைந்த மரங்களை, பனிப்படலத்தின் ஊடே தெரியும் சின்னஞ்சிறு ஊர்களை, ஷேவ் செய்யப்பட்டது போன்ற பெயர் தெரியாத மரங்களை, பூமியிலிருந்து மேலே கிளம்பி வானத்திற்கு சாமரம் வீசும் மரங்களை, கரையும் காகங்களை, கூவும் குயில்களை, ‘தண்டலை மயில்களின் நடனத்தை, தாமரைகள் விளக்கம் தாங்குவதை, குவளைக்கண் விழித்து நோக்குவதை’ வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வெள்ளிமலை நித்யவனத்தில் கால்பதித்தேன்.
ரம்மியமான இயற்கைச்சூழல், அனைத்து வசதிகளுடன் கூடிய தங்குமிடம், சரஸ்வதி அம்மாவின் கைப்பக்குவத்தில் அருமையான உணவு, இனிப்பும் புளிப்பும் கலந்த அந்தப் பானகம், அந்தியூர் மணியின் அனுசரணையான பேச்சு…. நகரத்தில் இருந்து வருபவர்களுக்கு நித்யவனம் சொர்க்கபூமிதான். தியானம், யோகா, தத்துவம், மனஅமைதி, இலக்கியம் இவைகளுக்கான பயிற்சி வகுப்பு நடத்த இந்த இடத்தை நீங்கள் ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதற்கான காரணம் அங்கு சென்றவர்களுக்கே தெரியும்!
இறை வழிபாடு முடிந்து குருநித்யா அரங்கில் நுழைந்தோம். நெடிய தோற்றத்தில், தூய வெண்ணிற ஆடையில், நிலம் அதிராமல் நடந்து வந்து அமர்ந்தார் குரு தில்லை செந்தில்பிரபு. சுய அறிமுகம் முடிந்தது. வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள். 50, 60 வயதுகளில் இருந்தோர் கால்வாசி. இந்த இளைஞர்களுக்குத்தான் என்னென்ன பிரச்சினைகள்? தொழில் முனைவோர், தனியார், அரசு அலுவலகங்களில் உயர்பதவியில் இருப்போர், காவலர்கள், இல்லத்தரசிகள் மற்றும் குடும்பத்தோடு வந்திருந்தோர் எனப் பலரகத்தினர். இவர்கள் என்ன காரணத்திற்காக உளக்குவிப்பு பயிற்சிக்கு வந்தார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தூக்கமின்மை, கவனச்சிதறல், மனஅழுத்தம், செல்போன் பாதிப்பு இவைகள்தான் எனலாம்.
வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் குரு மனம், விழிப்புணர்வு, கவனக்குவிப்பு, இக்கணத்தில் வாழ்தல் முதலான விசயங்களைக் கூறினார். வகுப்புக்கு நேரத்தோடு வருதல், செல்போன் தடை இதனை கவனிப்புடனும் கண்டிப்புடனும் செயல்படுத்தினார். கேள்விகளும் பதில்களுமாக வகுப்பு சென்றது. 2 மணியிலிருந்து 5.30 மணிவரை Break. இரவு 9.00 மணி வரை வகுப்பு நீண்டது. சிறப்பாக, சாப்பாடு பற்றி சொல்லியே ஆகவேண்டும். வீட்டில் கூட நாம் சாப்பிடுகிறோம்தான். இங்கு சாப்பிட்டதுதான் சாப்பாடு. வாயார, வயிராற சோற்றை அள்ளி, அள்ளி உண்டோம்! பசித்துப் புசி என்று சும்மாவா சொன்னார்கள்? சரஸ்வதியம்மாள் நல்ல உடல் நலத்துடன் வாழ இறை அருள்புரியட்டும்! இங்கிருந்த மூன்று நாட்களும் குருவாலும் இயற்கை சூழலாலும், அகமும் புறமும், அடியோடு மாறிவிட்டது. அதிர்ந்த பேச்சரவம் கூட கேட்கவேயில்லை.
சனிக்கிழமையன்று பிரணாயாம, தியானப் பயிற்சிகள் முடிந்த பிறகு குரு இன்னும் சில பயிற்சிகளை பயிற்றுவித்தார். அதாவது, நின்ற நிலை, கிடந்த நிலை, அமர்ந்த நிலை மட்டுமன்றி உடலசைவுகள் மூலமான பயிற்சியும் நாடி நரம்புகளை புத்துணர்ச்சி அடையச்செய்யும் என்று கூறினார். அடுத்து தூக்கமின்மை பிரச்சனைக்காகத்தான் பலபேர் இங்கு வந்திருந்தோம். அந்தப் பயிற்சி முடியும் தருவாயில் பலரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதை ‘கொர் கொர்’ குறட்டையொலியால் உணரமுடிந்தது. இப்பயிற்சிக்குப் பின்னர் நான் எப்போதும் நித்ரா தேவியின் அணைப்பிலேயே இருந்தேன். யாராவது ஒருவர் தேவியின் பிடியிலிருந்து என்னை எழுப்பிக்கொண்டே இருந்தார்கள். எதற்காக நான் இங்கே வந்தேனோ அது நிவர்த்தியானதை உணர்ந்தேன்.
நான் அன்று மதியம் உங்கள் புத்தகங்களை அந்தியூர் மணியிடம் வாங்கிக் கொண்டு வந்ததைப் பார்த்து பலரும் ஆர்வமுடன் சென்று வாங்கினர். இரவு உணவு முடிந்தவுடன் அந்தியூர் மணி, ‘இசை மழையில் நனையத் தயாரா’ குங்கள் என அன்பு வேண்டுகோள் விடுக்க, மதியம் வாங்கிய புத்தக வாசம் என்னை அறைக்கு அழைக்க, நான் புத்தகத்தில் மூழ்கினேன். இங்கே இசை மழையில் நனைந்து, அனைவரும் தலை துவட்டும் நேரத்தில் நான் அங்கு செல்ல ‘வாங்க வாங்க நீங்க ஒரு பாட்டுப் பாடுங்க’ என்றவுடன் மங்களம் பாடி இசைக் கச்சேரியை முடித்துவைத்தேன்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியோடு வகுப்பு நிறைவடையும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டது. அன்றைய வகுப்பில் இதுவரை கற்றுக்கொடுத்த பயிற்சிகள், தியானமுறைகள், சந்தேக நிவர்த்திகள் மறுபடியும் நினைவூட்டப்பட்டது. மூன்று நாட்களாக நடைபெற்ற பயிற்சியின் பின்னூட்டம் பற்றி பலர் பேசினர். பின்பு குரு அனைவரையும் கண்களை மூடி அமரக் கேட்டுக் கொண்டார். இறுதியாக அவர் உபதேசித்த ‘அந்த மந்திரம்தான்’ அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இதுதான் இந்தப் பயிற்சியின் உச்சம்! அந்தக் குரலின் சக்தியும், அமைதியும், அந்த இடத்தின் சூழலும் எப்படிப்பட்டவரையும் அசைத்துப் பார்த்துவிட்டது என்றே சொல்வேன். மூன்று நாட்களாக எடுத்துக்கொண்ட பயிற்சியில் மனம் பண்படுத்தப்பட்ட நிலம்போல் அவ்வளவு இலகுவாக இருந்ததால் அவரவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், விசும்பலும், சன்னமான அழுகையொலியும், அவ்விடத்தை நிறைத்தது. மனதில் உள்ள குப்பைக்கூளங்களைத் தூர்வாரி, சரிசெய்துவிட்டு அமைதியாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார் குரு. ‘கல்லுதல்’ என்ற சொல்லுக்கு ‘அகழ்தல்’ எனப் பொருள். ஒரு ஆசிரியராக எங்களின் அகத்தே இருந்து என்னென்ன அகழ்ந்தெடுத்தார் என்பதை நாங்கள் மட்டுமே அறிவோம். கலங்கிய விழிகளுடன் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். ‘கண்டும் கேட்டும் உறவாடிய நாங்கள் உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிந்தோம்’.
ஏன் சார் எங்களை அழ வைச்சீங்க?
நித்யவனத்தின் அருமருந்தை உட்கொண்டு வீடு திரும்பிய நான் நானாக இல்லை! யாரிடமும் எதுவும் பேசத் தோன்றவில்லை. மனதின் கசடுகள் நீங்கி, எண்ணஅலைகள் ஏதுமற்றவளாக, அமைதியாக என்னை நானே உள்நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! குறையொன்றுமில்லை!
பயிற்சிக்கு வந்த அனைவரின் சார்பாக குருவுக்கும், தங்களுக்கும், மற்ற வர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்!
I am writing to express my immense gratitude for the incredible three-day residential meditation workshop held from February 28 to March 2, 2025 , at Nithyavanam, Vellimalai. It was an absolute pleasure to be a participant in this transformative experience.
From the serene location to the comfortable accommodation, delicious food, and, most importantly, the well-structured meditation workshop, every aspect of the program was flawlessly organized. The guidance and hand-holding approach made it exceptionally easy for a novice like me to learn and follow the proven meditation technique in , Ulakkuvippu. Nothing could have been better than this event!
A special thanks to “Guruji” Mr. Thillai Senthil for their dedicated care and commitment to ensuring that every participant absorbed the intended teachings with clarity and confidence. His personal attention made a significant impact on my learning journey.
I also extend my sincere appreciation to Writer “J ” for incorporating this session into Unified Wisdom. This workshop is truly a must-have experience for anyone aspiring to achieve excellence in both personal and professional life.
Once again, thank you for organizing such a life-changing program. I look forward to participating in more such enriching sessions in the future.
Yesterday evening After I experienced the Stillness meditation. Yogic exercises Asanas, Panayama & Chaitanya Meditation I felt calm and peaceful inside. My mind was fully quiet I didn’t think about any worries or problems. For The first time I felt my mind is so happy without any reason & thought process, mind is entirely happy.
Today morning nearly after 06:30 am I experienced the above 5 sets of yoga practices, My mind is entirely blank and calm with happy, I experienced this peaceful silent for more than 2 hours.
Especially while I’m doing Chaitanya meditation, I felt too silent in my inner mind, I entirely connected with myself. After I experienced the Chaitanya Meditation my entire body is relaxed, my mind is calm and very happy. I felt too wonderful experience in Chaitanya meditation.