உளக்குவிப்பு- கடிதம் – சூரிய நாராயணன்

வணக்கம்

மார்ச் 8-10 2024 தேதிகளில் நடந்த உளக்குவிப்பு வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பயிற்சி செய்யத் தொடங்கி 11 மார்ச் 2025தோடு சரியாக ஒரு வருடம் நிறைவடைந்தது (மார்ச் 12 2024ல் இருந்து பயிற்சியைத் தொடங்கினேன்). இந்த ஒரு வருடத்தில் 15ல் இருந்து 20 (அதிகபட்சம்) நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் பயிற்சியை விடாமல் செந்திருக்கிறேன்.

இரண்டு வெளிநாட்டுப் பயணங்கள், கிட்டத்தட்ட எல்லா மாதங்களிலும் வெளியூர் பயணங்களுக்கு இடையிலும் தவறாமல் பயிற்சி செய்ய முடிந்திருப்பதே பெரும் நிறைவைத் தருகிறது.

– சூரிய நாராயணன்


இது கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் 8,9 &10 ஆகிய தேதிகளில் ஈரோடு அருகே உள்ள மலைதங்குமிடத்தில் யோகா ஆசிரியர் திரு. தில்லை செந்தில் பிரபு அவர்கள் நடத்திய மூன்று நாள் உளக்குவிப்பு – தியானபயிற்சி முகாமில் கலந்துகொண்ட திரு.சூரிய நாராயணன் அவர்கள் பயிற்சி முகாமில் கற்றுக்கொண்ட தியானபயிற்சிகளை கடந்த ஓராண்டாக தொடர்ச்சியாக பயிற்சி செய்து அதன் மூலமாக தான் உணர்ந்த தியான அனுபவங்களை இந்த தியான முகாமை ஏற்பாடு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பு.

இந்த கடிதம் கடந்த 8 ஏப்ரல் 2025 அன்று எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தில் உளக்குவிப்பு- கடிதம் எனும் தலைப்பில் வெளியாகி இருந்தது

எழுத்தாளர் திரு. ஜெயமோகன்